News October 23, 2024
புதுச்சேரியில் விமான சேவை தள்ளிவைப்பு

புதுவையில் வரும் 27ஆம் தேதி இன்டிகோ விமான சேவை தொடங்க திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது விமான சேவை தொடங்கும் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. விமான நிலைய அதிகாரி கூறுகையில், இது பண்டிகை காலம் என்பதால் மக்கள் விமானத்தில் பயணம் செய்யவே அதிகம் விரும்புகின்றனர். இதனால், முக்கிய நகரங்களுக்கு கூடுதல் விமானங்கள் இயக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. எனவே, இந்த சேவை டிசம்பர் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 19, 2025
புதுவை: 135 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பு!

புதுவை காவல்துறையில் காலியாக உள்ள காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கான விண்ணப்பங்கள்
கடந்த 13.08.2025 முதல் 12.09.2025 அன்று மாலை 03.00 மணி வரை இணைய வழியில் பெறப்பட்டது. இதில் மொத்தமாக 10,063 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அவைகள் ஆய்வு செய்யப்பட்டு 9,928 விண்ணப்பங்கள் ஏற்றுகொள்ளப்பட்டன. 135 விண்ணப்பங்கள் பல்வேறு காரணங்களுக்காக நிராகரிக்கப்பட்டன.
News November 18, 2025
புதுவை: மலர்க்கண்காட்சி குறித்து ஆலோசனை கூட்டம்

புதுச்சேரி அரசு வேளாண்துறை சார்பில், புதுச்சேரியில் வரும் 2026 ஜனவரி 30, 31 மற்றும் பிப்ரவரி 1 ஆகிய தேதிகளில் 36வது காய்கறி, கனி மற்றும் மலர்க்கண்காட்சி நடத்துவது சம்பந்தமாக வேளாண்துறை அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் துறை செயலர், மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன், முதுநிலை காவல் கண்காணிப்பாளர் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
News November 18, 2025
புதுவை காங்கிரஸ் தலைவர்கள் டெல்லி பயணம்

தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 14 மாநிலங்களில் நடைபெறும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணி தொடர்பாக காங்கிரஸ் சார்பில் ஆய்வு கூட்டம், இன்று புதுடில்லி இந்திரா பவனில் நடக்கிறது. இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, காங்கிரஸ் சட்டசபை தலைவர் வைத்தியநாதன் ஆகியோர் டில்லி சென்றுள்ளனர்.


