News October 23, 2024
புதுச்சேரியில் விமான சேவை தள்ளிவைப்பு

புதுவையில் வரும் 27ஆம் தேதி இன்டிகோ விமான சேவை தொடங்க திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது விமான சேவை தொடங்கும் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. விமான நிலைய அதிகாரி கூறுகையில், இது பண்டிகை காலம் என்பதால் மக்கள் விமானத்தில் பயணம் செய்யவே அதிகம் விரும்புகின்றனர். இதனால், முக்கிய நகரங்களுக்கு கூடுதல் விமானங்கள் இயக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. எனவே, இந்த சேவை டிசம்பர் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 18, 2025
புதுவை: கோவை விழாவுக்கு முதல்வருக்கு அழைப்பு

பீகார் மாநில முதலமைச்சராக நிதிஷ்குமார் 10 வது முறையாக நாளை மறுநாள் வியாழக்கிழமை பதவியேற்க உள்ளார். இந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய அமைச்சர்கள் பலர் பங்கேற்கின்றனர். இந்த விழாவிற்கும் கோவையில் நாளை இயற்கை விவசாயிகள் மாநாடு நடக்கிறது. இதில் பிரதமர் பங்கேற்று உரையாற்றுகிறார். இந்த விழாவிலும் பங்கேற்க முதலமைச்சர் ரங்கசாமிக்கு இன்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
News November 18, 2025
காரைக்கால்: இரங்கலை தெரிவித்த எம்எல்ஏ!

நெடுங்காடு எம்எல்ஏ சந்திர பிரியங்கா, காரைக்கால் மாவட்ட ஆட்சியரின் தாயார் மறைவு குறித்து வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், காரைக்கால் ஆட்சியர் ரவி பிரகாஷ் தாயார் விஜயவாடாவில் காலமான செய்தி கேட்டு மிகுந்த துயரமும் வருத்தமும் அடைந்தேன். அன்னாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பணிவுடன் பிரார்த்திக்கிறேன். அவருக்கும், அவருடைய குடும்பத்தார்க்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
News November 18, 2025
புதுவை: மருத்துவ படிப்பிற்கான பட்டியல் வெளியீடு!

புதுவை சென்டாக் இறுதிக்கட்ட கலந்தாய்வுக்கான திருத்தப்பட்ட பட்டியல் சென்டாக் இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டது. இதில் அரசு ஒதுக்கீட்டில் பல் மருத்துவம், ஆயுர்வேதம் 47 பேரும், நிர்வாக ஒதுக்கீட்டில் எம்.பி.பி.எஸ் 73 பேரும், பல்மருத்துவம், ஆயுர்வேதம் & கால்நடை மருத்துவம் 130 பேரும் இடம் பெற்றனர். இதில் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் இன்று (நவ.18) தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.


