News September 15, 2024
புதுச்சேரியில் ரூ.5.70 கோடிக்கு தீர்வு

புதுச்சேரி நீதிமன்ற வளாகத்தில், புதுச்சேரி சட்டப்பணிகள் ஆணையத்தின் சார்பில், தேசிய மக்கள் நீதி மன்றம் நேற்று நடந்தது. புதுச்சேரி மாநில சட்டப்பணிகள் ஆணையத்தின் செயல் தலைவர் சுந்தர் வழிகாட்டுதலின் படி, நடந்த லோக் அதாலத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளும், நேரடி வழக்குகளுக்கு நடந்த லோக் அதாலத்தில் 857 வழக்குகள் முடிக்கப்பட்டு ரூ.5 கோடி 70 லட்சத்து 756 ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டது.
Similar News
News October 25, 2025
புதுச்சேரி: பொதுமக்கள் குறை தீர்வு நாள் முகாம்

புதுச்சேரி டிஜிபி ஷாலினிசிங் உத்தரவின்படி புதுச்சேரிக்கு உட்பட்ட காவல் நிலையங்களில், (அக்.25) பொதுமக்கள் குறை தீர்வு முகாம் நடைபெறும் என புதுச்சேரி முதுநிலை காவல் கண்காணிப்பாளர் இன்று கலைவாணன் தெரிவித்துள்ளார். இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளைப் புகார் மூலம் தெரிவிக்கலாம் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
News October 25, 2025
புதுச்சேரி: வங்கி சேவை தற்காலிகமாக நிறுத்தம்

புதுச்சேரியில் நாளை (25.10.2025) பாரத ஸ்டேட் வங்கியின் பராமரிப்பு பணிகள் காரணமாக இணைய சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. இதனைத் தொடர்ந்து நாளை சனிக்கிழமை மதியம் 1.10 மணி முதல் 2.10 மணி வரை வங்கியின் உப்பி, IMPS, YONO, NEFT, RTGS ஆகிய இணைய சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. இந்த இடைப்பட்ட நேரத்தில் ATM மற்றும் UPI லைட் சேவைகளை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News October 25, 2025
காரைக்காலில்: மின் தொகை வசூல் மையம் இயங்கும்

காரைக்காலில் உள்ள மின் நுகர்வோர்கள் கவனத்திற்கு (25.10.25) சனிக்கிழமை நாளை காரைக்கால் நகரம் தலைமை அலுவலகம், நேரு நகர், கோட்டுச்சேரி, நெடுங்காடு, திருநள்ளாறு அலுவலகங்களில் மின் தொகை வசூல் மையம் காலை 8.45 முதல் மதியம் 1.00 மணி வரை வழக்கம் போல் இயங்கும் என்பதால் தங்களது மின் கட்டண பாக்கியினை உடனடியாக செலுத்தி, மின் துண்டிப்பை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


