News March 21, 2025
புதுச்சேரியில் ரூ.1000 கேட்டு குவிந்த பெண்கள்

மகளிருக்கு அறிவிக்கப்பட்ட ரூ.1,000 உதவித்தொகை கேட்டு புதுச்சேரி மகளிர் மேம்பாட்டு துறை அலுவலகத்தில் பெண்கள் குவிந்தனர். அவர்களிடம், இதுவரை அரசிடம் இருந்து எந்த ஆணையும் வரவில்லை. இத்திட்டத்திற்கு நிதி ஒதுக்கிய பின்பே உதவித்தொகை வழங்கும் பணி பயன்பாட்டுக்கு வரும். இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்று அலுவலர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, பெண்கள், அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Similar News
News April 20, 2025
செல்வம் பெருக இவரை வணங்குங்கள்

படைத்தால், காத்தல், அழித்தல் என மூன்றும் செய்வதால் இவருக்கு பைரவர் என அழைக்கப்படுகிறார். பைரவர் என்றால் பயத்தை நீக்குபவர், பாவத்தை போக்குவர் என்று பொருள். அனைத்து சிவாலாயங்களிலும் வழிபாடு சூரியனிடமிருந்து ஆரம்பித்து அர்த்தசாமப் பூஜையாக பைரவருடன் முடிவடையும். தேய்பிறை அஷ்டமியன்று பைரவரை வழிபட்டால் செல்வம் பெருகும், கடன் நீங்கும், தோஷம் நீங்கும் மற்றும் பல நன்மைகள் கிடைக்கும். இதை SHARE செய்யவும்
News April 20, 2025
புதுச்சேரி: மின்சாரம் குறித்து புகார் அளிக்க சிறப்பு எண்

புதுச்சேரி மின்சாரத் துறை, மக்களிடம் இருந்து புகார் அளிக்கும் முறைகளை எளிதாக்கி, மின்சாரம் தொடர்பான பிரச்சினைகளை விரைவாக தீர்த்து வருகிறது. அதன்படி புதுவைக்கு – 04132334277, காரைக்காலுக்கு – 04368 222 428 என்ற எண்களை தொடர்பு கொண்டு மின்சாரம் தொடர்பான புகார்களை பதிவு செய்யலாம் அல்லது மின்சாரத் துறை இணையதளம் http://electricity.py.gov.in மூலம் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். இந்த தகவலை SHARE செய்யவும்
News April 20, 2025
இந்தியா ராணுவத்தில் இணைய ஒரு வாய்ப்பு

அக்னிவீர் திட்டத்தின் கீழ் இந்திய ராணுவத்தில் பல்வேறு பிரிவுகளில் காலிப்பணியிடங்கள் நிறப்ப உள்ளன. இதற்கு பதிவு செய்வதற்காக, காரைக்காலைச் சேர்ந்த இளைஞர்களுக்கு 21.04.2025 அன்று அறிஞர் அண்ணா அரசு கல்லூரியிலும், புதுச்சேரியைச் சேர்ந்த இளைஞர்களுக்கு 22.04.2025 அன்று தாகூர் கலைக் கல்லூரியிலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதை வேலை தேடும் நண்பர்களுக்கு SHARE செய்து தெரியப்படுத்துங்கள்.