News May 14, 2024
புதுச்சேரியில் மோட்டார் வாகனங்களுக்கு அபராதம்

இந்தியாவில் உள்ள அனைத்து மோட்டார் வாகனங்களுக்கும் மூன்றாம் நபர் காப்பீடு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் புதுச்சேரியில் மோட்டார் வாகனங்களுக்கு 3 ஆம் நபர் காப்பீடு செய்யாவிட்டால் ரூபாய் 4,000 வரை அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்து துறை துணை ஆணையர் குமரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆகவே, பொதுமக்கள் தங்கள் வாகனங்களை மூன்றாம் நபர் காப்பீடு செய்து வாகனங்களை இயக்குமாறு வலியுறுத்தப்படுகிறது.
Similar News
News March 3, 2026
புதுவை: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <
News March 3, 2026
புதுவை அரசுக்கு – நாஜிம் வேண்டுகோள்

காரைக்கால் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் A.M.H. நாஜிம், புதுவை அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில் குறிப்பிட்டுள்ளதாவது, தேர்வு செய்யப்பட்ட 192 ஆரம்ப பள்ளி ஆசிரியர்களுக்கு, (PST) தேர்தல் நடத்தை விதி (MCC) நெருங்கி வருவதால், தேர்தல் கமிஷன் நடத்தை விதியை அறிவிப்பதற்கு முன்பாக, உடனடியாக பணி ஆணை வழங்க வேண்டும் என்று இவ்வாறு கோரியுள்ளார்.
News March 3, 2026
புதுச்சேரி: காங்கிரஸ் தேர்தல் ஆலோசனை கூட்டம்

வருகின்ற 2026 புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்வது குறித்து, காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் ஊடக மற்றும் விளம்பரக் குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயலாளரும், புதுச்சேரி மாநிலப் பொறுப்பாளருமான டாக்டர் அஞ்சலி நிம்பால்கர் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது.


