News September 13, 2024

புதுச்சேரியில் மது கடைகளை மூட உத்தரவு

image

புதுச்சேரியில் வருகின்ற செப்டம்பர்.17ஆம் தேதி செவ்வாய் கிழமை அன்று இஸ்லாமிய பண்டிகையான மிலாது நபியை அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு முன்னிட்டு, புதுச்சேரியில் அனைத்து விதமான மதுக்கடைகளையும், அதனுடன் இணைந்த மதுபான கூடங்கள் மற்றும் தங்கும் விடுதியுடன் இணைந்த மதுபானக் கூடங்கள் மூட புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது.

Similar News

News December 17, 2025

புதுவை: மீனவர்களின் முன்னேற்றம் குறித்து முதல்வர் ஆலோசனை

image

மீனவர்களின் பொருளாதார முன்னேற்றம் குறித்து புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி, இயக்குநர் கிருஷ்ணன் தலைமையிலான வங்காள விரிகுடா நிறுவன நிர்வாகிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். காரைக்கால் பொலிவுறு மீன்பிடி துறைமுகத்தை மேம்படுத்துதல், புதுச்சேரி மீனவர்களின் பொருளாதார முன்னேற்றம் மற்றும் அவர்களின் வாழ்வாதார மேம்பாடு குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

News December 17, 2025

புதுச்சேரிக்கு மழை எச்சரிக்கை

image

புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக புதுச்சேரியின் ஓரிரு பகுதிகளில் வரும் டிச.20 வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த தகவலை அனைவரும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க…

News December 17, 2025

புதுவை: மது போதையில் கூலித்தொழிலாளி பலி

image

முத்திரையர்பாளையத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி மணிபாலன் (55). இவர் நேற்று முன்தினம் அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு கல்மண்டபம் மதுபான கடை அருகே மயங்கி கிடந்துள்ளார். பின்னர் அவரை கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் மணிபாலன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!