News April 24, 2025

புதுச்சேரியில் பட்டதாரி வாலிபர் தற்கொலை

image

புதுச்சேரி கரியமாணிக்கம், ராஜகோபால் நகரைச் சேர்ந்தவர் தாமோதரன்(21). பட்டதாரியான இவர், கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் மது குடித்து வந்துள்ளார். இதனை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த தாமோதரன் நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில், நெட்டப்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News November 21, 2025

புதுச்சேரி: நகராட்சி ஆணையர் எச்சரிக்கை

image

புதுச்சேரி உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் நேற்று வெளியிட்டுள்ள செய்தியில், பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, தடை மற்றும் நிவாரணம்) சட்டம், 2013ன் பிரிவு 4ன் படி பத்திற்கும் மேற்பட்டோர் பணிபுரியும் ஒவ்வொரு நிறுவனமும், ஒரு உள் புகார் குழுவை அமைக்க வேண்டும். தவறும் பட்சத்தில் புதுச்சேரி நகராட்சிகள் சட்டம், 1973ன் படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

News November 21, 2025

புதுச்சேரி: நகராட்சி ஆணையர் எச்சரிக்கை

image

புதுச்சேரி உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் நேற்று வெளியிட்டுள்ள செய்தியில், பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, தடை மற்றும் நிவாரணம்) சட்டம், 2013ன் பிரிவு 4ன் படி பத்திற்கும் மேற்பட்டோர் பணிபுரியும் ஒவ்வொரு நிறுவனமும், ஒரு உள் புகார் குழுவை அமைக்க வேண்டும். தவறும் பட்சத்தில் புதுச்சேரி நகராட்சிகள் சட்டம், 1973ன் படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

News November 21, 2025

புதுவை: ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.30 லட்சம் இழப்பு!

image

புதுவை பிள்ளைச்சாவடி பகுதியை சேர்ந்த மஞ்சினி என்பவர், ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்களை இணையத்தில் தேடி வந்தார். அப்போது அவரது மொபைலுக்கு வந்த லிங்க் மூலம் ரூ.30 லட்சம் வரை பணம் செலுத்தி ஆன்லைனில் சூதாடியுள்ளார். ஆனால் இதன்மூலம் கிடைத்த பணத்தை தனது வங்கி கணக்கிற்கு மாற்ற முடியவில்லை. அப்போது தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் சைபர் கிரைம் போலீசில் இது குறித்து புகார் அளித்தார்.

error: Content is protected !!