News April 24, 2025

புதுச்சேரியில் பட்டதாரி வாலிபர் தற்கொலை

image

புதுச்சேரி கரியமாணிக்கம், ராஜகோபால் நகரைச் சேர்ந்தவர் தாமோதரன்(21). பட்டதாரியான இவர், கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் மது குடித்து வந்துள்ளார். இதனை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த தாமோதரன் நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில், நெட்டப்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News December 1, 2025

புதுச்சேரியில் வருங்கால வைப்பு நிதி பதவிக்கு தேர்வு

image

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில், ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் உள்ள உதவி வருங்கால வைப்பு நிதி ஆணையர், பதவிக்கு தேர்வு நாடு முழுவதும் நேற்று நடைபெற்றது. புதுச்சேரியில் காஞ்சி மாமுனிவர் பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், தாகூர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, பாரதிதாசன் அரசு மகளிர் கல்லுாரி உள்ளிட்ட மூன்று மையங்களில் நடந்தது.

News December 1, 2025

புதுச்சேரி: Driving Licence-க்கு வந்த முக்கிய Update!

image

புதுச்சேரி மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்கு RTO அலுவலகம் செல்லா வேண்டாம். <>இந்த லிங்கில் <<>>சென்று மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.!

News December 1, 2025

புதுச்சேரி: பணி நியமன ஆணை வழங்கிய முதல்வர்

image

புதுச்சேரி அரசு பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை மற்றும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் புஸ்ஸி வீதியில் உள்ள கம்பன் கலையரங்கத்தில் இன்று புதிதாக தேர்வு செய்யப்பட்ட கிராம நிர்வாக அலுவலர், கிராம உதவியாளர் மற்றும் பல்நோக்கு பணியாளர் ஆகியோர்களுக்குப் பணி நியமன ஆணை வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில், துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் ஆணையினை வழங்கினர்

error: Content is protected !!