News April 24, 2025
புதுச்சேரியில் பட்டதாரி வாலிபர் தற்கொலை

புதுச்சேரி கரியமாணிக்கம், ராஜகோபால் நகரைச் சேர்ந்தவர் தாமோதரன்(21). பட்டதாரியான இவர், கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் மது குடித்து வந்துள்ளார். இதனை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த தாமோதரன் நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில், நெட்டப்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News September 16, 2025
மத்திய அமைச்சருடன் புதுச்சேரி முதல்வர் சந்திப்பு

புதுவைக்கு வருகை தந்துள்ள மத்திய தொழிலாளர் நலம் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியாவை, இன்று காலாப்பட்டு அருகே உள்ள தனியார் ஹோட்டலில், முதலமைச்சர் ரங்கசாமி மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது புதுவை சபாநாயகர் செல்வம் உடனிருந்தார். அப்போது 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஆலோசனை நடத்தினர்.
News September 16, 2025
புதுச்சேரி விமான நிலையத்தில் பயணியர் சேவை தினம்

புதுச்சேரி விமான நிலையத்தில், பயணியர் சேவை தினம் நாளை கொண்டாடப்பட உள்ளது. நாளைய தினம் விமான நிலையத்தில், இலவச மருத்துவ பரிசோதனை முகாம், இரத்த தான முகாம், மற்றும் சிவில் விமான போக்குவரத்து துறையில் உள்ள வேலை வாய்ப்புகள் குறித்து விளக்க நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதனால் படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றனர்.
News September 16, 2025
புதுவை: ஐ.டி.ஐ.,யில் தேசிய தொழில் பழகுநர் பயிற்சி முகாம்

புதுச்சேரி மேட்டுப்பாளையம் அரசு ஆண்கள் ஐ.டி.ஐ. முதல்வர் அழகானந்தம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் புதுச்சேரி அரசு தொழிலாளர் துறை, துணை தொழிலாளர் தொழில் பழகுநர் ஆலோசகர் சார்பில் பிரதம மந்திரி சேர்க்கை முகாம் மேட்டுப்பாளையம் அரசு ஆண்கள் ஐ.டி.ஐ.யில், நாளை 17ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது.தொழில் பழகுநர் பயிற்சியில் சேர்ந்து தேசிய தொழில் பழகுநர் சான்றிதழ் பெற்று பயனடையலாம்.