News April 16, 2024
புதுச்சேரியில் நாளை யோகா வகுப்பு

புதுவை: முத்தியால்பேட்டை ஆறுமுகா திருமண நிலையத்தில் யோகா வகுப்பு நாளை 17-ம் தேதி துவங்கி 7 நாட்கள் நடக்கிறது. இந்த யோகா வகுப்பில் கலந்து கொள்வதால் ஆஸ்துமா, ஒற்றை தலைவலி, நீரிழிவு, முதுகு வலி, செரிமான கோளாறுகள், மனக்கவலை, மன அழுத்தம், தூக்கமின்மை போன்ற பிரச்னைகளில் இருந்து விடுபடலாம். விருப்பம் உள்ளவர்கள் 94432-77486, 94432-75040 என்ற எண்களை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.
Similar News
News December 6, 2025
புதுவை: கழிவறையில் மயங்கி விழுந்த பெண் பலி

திரு-பட்டினம், போலகம் மரைக்காயர் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டாலின். இவரது மனைவி சந்தனமேரி. இவர் தனியார் நிறுவன காவலாளியாக வேலை செய்துவந்துள்ளார். இந்நிலையில் நேற்று வீட்டின் பின்புறமுள்ள கழிவறைக்கு சென்ற போது சந்தனமேரி திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து, அவரை சிகிச்சைக்காக அழைத்து செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து திரு-பட்டினம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News December 6, 2025
புதுவை: வழக்கறிஞருக்கு கொலை மிரட்டல் விடுத்த தாய்&மகன்

வாழைக்குளம் அருகே உள்ள அக்காசாமி மடம் வீதியைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் சுரேஷ்(46). இவர் முத்தியால்பேட்டையைச் சேர்ந்த விஷாலி என்பவருக்கு ஒரு வழக்கிலிருந்து வரவேண்டிய தொகையை வாங்கி கொடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன் என்பவரும் அவரது தாய் விஜயா என்பவரும் வழக்கறிஞர் சுரேஷிற்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் பெரிய கடை போலீசார் தாய் மற்றும் மகனை தேடி வருகின்றனர்.
News December 6, 2025
புதுச்சேரி: ஆந்திராவைச் சேர்ந்த 2 பெண்கள் கைது!

புதுச்சேரியில் சாலையைக் கடக்க உதவி செய்வது போல நடித்து, 78 வயது மூதாட்டியிடம் இருந்த 22 சவரன் நகைகள் மற்றும் ரூ.1 லட்ச பணத்தையும் திருடிச் சென்ற ஆந்திராவைச் சேர்ந்த சாரதா, வள்ளி என்ற இரு பெண்களை போலீசார் கைது செய்தனர். மூதாட்டி காசிக்கு செல்வதற்காக தனது தோழியிடம் கொடுத்து வைத்திருந்த நகைகளை திரும்பி வாங்கிக் கொண்டு வரும்போது மூதாட்டியிடம் இருந்து நகையை திருடிச் சென்றது குறிப்பிடத்தக்கது.


