News April 19, 2025

புதுச்சேரியில் தொடரும் வெடிகுண்டு மிரட்டல்

image

புதுச்சேரி கடற்கரை சாலை மற்றும் ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள தனியார் ஹோட்டல்களுக்கு ஈ மெயில் மூலம் இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் கொண்டு சோதனை மேற்கொண்டனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர் அலுவலகம், துணை நிலை ஆளுநர் மாளிகைக்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்தது குறிப்பிடத்தக்கது.

Similar News

News October 31, 2025

புதுச்சேரியில் மின் கட்டணம் உயர்வு!

image

புதுவையில் வீடுகளுக்கு முதல் 100 யூனிட் வரை, 1 யூனிட்டுக்கு ரூ.2.70-ஆக இருந்த மின் கட்டணம் தற்போது ரூ.2.90-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 101 முதல் 200 யூனிட் வரை ரூ.3.25 இருந்து ரூ.4; 201 முதல் 300 யூனிட் வரை ரூ.5.40 இருந்து ரூ.6; 300 யூனிட்டுக்கு மேல் ரூ.6.80 இருந்து ரூ.7.50-ஆக உயர்த்தப்பட்டு, அக்.1 முதல் பயன்படுத்தப்பட்ட மின் பயன்பாடு கட்டணத்தில், உயர்த்தப்பட்ட கட்டணம் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 31, 2025

புதுச்சேரி: வாலிபருக்கு சரமாரி வெட்டு

image

புதுச்சேரி நாவர்குலம் களைவாணர் நகர் பகுதியில் வாலிபர் மீது ஒரு கும்பல் சரமாரி தாக்குதல், தாக்குதலில் படுகாயம் அடைந்த வாலிபர் மிகவும் ஆபத்தான நிலையில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தக் கொலை வெறி தாக்குதலுக்கான காரணத்தை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். புதுச்சேரியில் போலீசார் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கேட்டுக்கொள்கின்றனர்.

News October 30, 2025

புதுச்சேரி: மின் தடை அறிவிப்பு

image

புதுச்சேரி, நாளை (31.10.2025) வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நெடுங்காடு மின் பிரிவிற்குட்பட்ட உயர் மின் அழுத்த பாதையில், சில பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் செருமாவிலங்கை பத்தக்குடி, தேவமாபுரம், காமராஜர் சாலை, கீழபருத்திகுடி, அம்பேத்கார் நகர் வரை உள்ள பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்துறை உதவி பொறியாளர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!