News August 14, 2024

புதுச்சேரியில் டிஜிபி தலைமையில் ஆலோசனை கூட்டம்

image

புதுச்சேரி நடை பெற உள்ள சுகந்திர தினத்தை மிகவும் பாதுகாப்போடு கொண்டாட டிஜிபி ஷாலினி சிங் தலைமையில் காவல்துறை அதிகாரிகள் கலந்தாய்வு இன்று நடைபெற்றது. இதில் சுதந்திர தினத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்பும் மற்றும் இரவு நேரங்களில் சோதனைகளை அதிகப்படுத்தவும் ஹோட்டல்கள் தங்கி உள்ளவர்களின் விவரங்களை சேகரிக்கவும் மேலும் ரவுடிகள் இல்லங்களில் சோதனை செய்யவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Similar News

News December 4, 2025

புதுச்சேரி: SBI வங்கியில் வேலை.. தேர்வு கிடையாது!

image

புதுச்சேரி மக்களே, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 20 – 35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள், வரும் டிச.23-க்குள் <>இங்கு <<>>க்ளிக் செய்து, இதற்கு விண்ணப்பிக்கலாம். சம்பளமாக மாதம் ரூ.51,000 வழங்கப்படும். இப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு கிடையாது. இந்த தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க!

News December 4, 2025

புதுவை: சிறையில் மொபைல் போன்கள்-4 கைதிகள் மீது வழக்கு

image

புதுச்சேரி, காலாப்பட்டு மத்திய சிறையில் 250-க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இங்கு அதிகாரிகளின் திடீர் சோதனையின் போது, விசாரணை கைதிகள் அறை மற்றும் பொது கழிப்பிடம் அருகே பிளாஸ்டிக் கவர்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 3 மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது சம்பந்தமாக 4 கைதிகள் மீது நேற்று வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

News December 4, 2025

புதுச்சேரி: அமைச்சர் பெயரில் போலி அறிவிப்பு!

image

புதுச்சேரி உள்துறை பொறுப்பு வகித்து வரும் அமைச்சர் நமச்சிவாயமே கல்வித்துறைக்கும் பொறுப்பு வகித்து வருகின்றார். பள்ளிகளுக்கு மழை விடுமுறையை நேற்று அளித்திருந்தார். அந்த அறிவிப்பையே பயன்படுத்தி இன்று (04.12.25) விடுமுறை என்று போலியாக தயாரித்து சமூக வலைதளத்தில் சில சமூக விரோதிகள் வெளியிட்டனர். இது குறித்து அமைச்சர் அலுவலகம் சார்பில் காவல்துறையில் நேற்று புகார் அளிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!