News August 10, 2024

புதுச்சேரிக்கு 10% நிதி உயர்த்தி வழங்க கோரிக்கை

image

சட்டப்பேரவையில் நேற்று (ஆக.09) கேள்வி நேரத்தின்போது பதிலளித்து பேசிய முதல்வர் ரங்கசாமி, மத்திய நிதி குழுவின் வரி பகிர்மானம் மாநிலங்களுக்கு மட்டுமே பொருந்தும். யூனியன் பிரதேசங்களுக்கு பொருந்தாது என மத்திய அரசு கூறியுள்ளது. மத்திய நிதி ஆணைய மானிய சூத்திரத்தின் அடிப்படையில் மத்திய நிதி உதவியை நிர்ணயிக்கும் வரை புதுச்சேரிக்கு 10% நிதி உயர்த்தி வழங்க கேட்டு வருகிறோம் என்று பேசினார்.

Similar News

News November 25, 2025

புதுவை: வெளிநாட்டு மாணவரை தேடி பிடித்த போலீசார்

image

ருவாண்ட நாட்டை சேர்ந்த சேமா மன்சி பபரீஷ்(35) என்பவர் சிதம்பரம் அண்ணாமலை ப.கழகத்தில் பட்டம் படித்த பின், புதுவை ஆரோவில் பகுதியில் தங்கி இருந்தார். இவரது விசா காலம் கடந்த அக்டோபரில் முடிவடைந்த நிலையில், விசா புதுப்பிக்கப்படவில்லை. புதுவையில் உள்ள வெளிநாட்டினர் பிராந்திய பதிவு அலுவலர்கள் இவரை தேடிய நிலையில், முதலியார்பேட்டை தனியார் விடுதியில் தங்கி இருப்பது தெரிந்து அவரை நேற்று போலீசார் பிடித்தனர்.

News November 25, 2025

புதுச்சேரி: மறுஅறிவிப்பு வரும்வரை கடலுக்கு செல்லாதீர்

image

புதுவை மீன்வளத்துறை இயக்குனர் முகமது இஸ்மாயில் இன்று (நவ.24) வெளியிட்டுள்ள செய்தியில் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின்படி நாளை 25-ந்தேதி முதல் கடலோரப்பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்று
தெரிவித்துள்ளது. இதனால் மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றார்

News November 25, 2025

புதுச்சேரி: மறுஅறிவிப்பு வரும்வரை கடலுக்கு செல்லாதீர்

image

புதுவை மீன்வளத்துறை இயக்குனர் முகமது இஸ்மாயில் இன்று (நவ.24) வெளியிட்டுள்ள செய்தியில் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின்படி நாளை 25-ந்தேதி முதல் கடலோரப்பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்று
தெரிவித்துள்ளது. இதனால் மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றார்

error: Content is protected !!