News August 10, 2024

புதுச்சேரிக்கு 10% நிதி உயர்த்தி வழங்க கோரிக்கை

image

சட்டப்பேரவையில் நேற்று (ஆக.09) கேள்வி நேரத்தின்போது பதிலளித்து பேசிய முதல்வர் ரங்கசாமி, மத்திய நிதி குழுவின் வரி பகிர்மானம் மாநிலங்களுக்கு மட்டுமே பொருந்தும். யூனியன் பிரதேசங்களுக்கு பொருந்தாது என மத்திய அரசு கூறியுள்ளது. மத்திய நிதி ஆணைய மானிய சூத்திரத்தின் அடிப்படையில் மத்திய நிதி உதவியை நிர்ணயிக்கும் வரை புதுச்சேரிக்கு 10% நிதி உயர்த்தி வழங்க கேட்டு வருகிறோம் என்று பேசினார்.

Similar News

News December 20, 2025

புதுவை: கூலி தொழிலாளி ஏரியில் மூழ்கி இறப்பு

image

பி.எஸ்.பாளையம் மாரியம்மன் கோயில் வீதியைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி அய்யனார்(59). சம்பவத்தன்று இவர் ஏரியில் மீன் பிடிக்க சென்றபோது, ஏரியில் மூழ்கியுள்ளார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த கலைச்செல்வன் மற்றும் சிலர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கே சிகிச்சையில் இருந்த அய்யனார் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். இதுகுறித்து திருபுவனை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News December 20, 2025

புதுவை: போலீஸ் உடற்தகுதி தேர்வு தேதி அறிவிப்பு

image

புதுச்சேரி, காவல்துறையில் காலியாக உள்ள போலீஸ் பணியிடங்களை நேரடி நியமனத்தின் மூலம் நிரப்ப அறிவிப்பு ஆணை கடந்த ஆகஸ்டு 12-ம் தேதி வெளியிடப்பட்டது. இதில் 9,932 விண்ணப்பங்கள் ஏற்றுக்கப்பட்டன. இந்நிலையில் இதற்கான உடல் தகுதி தேர்வு, உடல் திறன் தேர்வு வரும் ஜனவரி 2-ம் தேதி முதல் 12-ம் தேதி கோரிமேடு ஆயுதப்படை மைதானத்தில் நடக்க உள்ளது என காவல்துறை சிறப்பு பணி அதிகாரி ஏழுமலை தெரிவித்துள்ளார்.

News December 20, 2025

புதுவை: காசு வைத்து சூதாட்டம் – 9 பேர் கைது

image

உப்பளம் எக்ஸ்போ புதிய துறைமுக மைதானத்தில், சிலர் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து, அங்கு சூது விளையாடியவர்களை பிடித்து விசாரித்ததில், முதலியார்பேட்டை சேர்ந்த ராஜி, வாணரப்பேட்டை சேர்ந்த அருள், பிரகாஷ், சத்தியமூர்த்தி, அற்புதராஜ், பாவாணர் நகர் தமிழ்மணி, ஆட்டுப்பட்டி முருகன், வம்பாகீரப்பாளையம் தர்மேந்திரன் சுரேஷ் ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

error: Content is protected !!