News April 26, 2025

புதுக்கோட்டை: 3935 பேருக்கு அரசு வேலை

image

இளநிலை உதவியாளர், விஏஓ உள்ளிட்ட பணியிடங்களுக்காக நடத்தப்படும் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. வரும் ஜூலை12 ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 3935 பணியிடங்கள் நிரப்பப்படும் என TNPSC தெரிவித்துள்ளது. 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மே 24 ஆம் தேதிக்குள் https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கவும். அரசு வேலை தேடும் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்

Similar News

News November 28, 2025

புதுகை: 350 கிலோ கெட்டுப்போன மீன் பறிமுதல்

image

புதுக்கோட்டை மாநகரில், மேல 3ஆம் வீதி மீன் மார்க்கெட் மற்றும் டிவிஎஸ் முக்கம் பகுதி மீன் விற்பனைப் பகுதிகளில், கெட்டுப்போன மீன்கள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியருக்கு புகார் வந்தது. இதைத் தொடர்ந்து, புதுக்கோட்டை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், இரு இடங்களிலும் திடீர் சோதனை நடத்தியதில், 350 கிலோ கெட்டுப்போன மீனை பறிமுதல் செய்து 6000 அபராதம் விதித்தனர்.

News November 28, 2025

புதுகை: துணை நடிகர் திடீர் பலி

image

புதுகை நகர் மன்றத்தில் நடிகர் கார்த்தி நடிக்கும் சினிமா சூட்டிங் சில நாட்களாக நடந்து வருகிறது. நேற்று மக்கள் கூட்டம் நிற்பது போன்ற காட்சி எடுக்கப்பட்டது. இந்த நிலையில் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த துணை நடிகர் அய்யநாதன் (45), அருகிலுள்ள திருமண மண்டபத்தில் தங்கி இருந்தார். நேற்று திடீரென அவருக்கு மயக்கம் ஏற்பட்டு கீழே சுருண்டு விழுந்து பலியானார். இது குறித்து நகர போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News November 28, 2025

புதுக்கோட்டை: மாவட்ட ஆட்சியர் முக்கிய தகவல்!

image

புதுக்கோட்டை மாவட்டம், வடகிழக்கு பருவ மழையின் காரணமாக மாவட்ட ஆட்சியர் மு. அருணா முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளார். மழை வெள்ளம், எதிரொலியால் பேரிடரை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது. ஆகவே 10 பேரிடர் மைய கட்டிடங்கள், 433 நிவாரண மையங்கள் தயார்நிலை. அவசர தொடர்புக்கு 1077, 0431-222207.க்கு தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் மு. அருணா தகவல் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!