News April 26, 2025
புதுக்கோட்டை: 3935 பேருக்கு அரசு வேலை

இளநிலை உதவியாளர், விஏஓ உள்ளிட்ட பணியிடங்களுக்காக நடத்தப்படும் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. வரும் ஜூலை12 ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 3935 பணியிடங்கள் நிரப்பப்படும் என TNPSC தெரிவித்துள்ளது. 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மே 24 ஆம் தேதிக்குள் https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கவும். அரசு வேலை தேடும் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்
Similar News
News November 21, 2025
புதுகை: மாவட்ட ஆட்சியர் முக்கிய தகவல்!

புதுகை மாவட்டம் திருமயம் வட்டாரம் லெம்பலக் குடியில் நாளை நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட சேவை முகாம், நாளை (22.11.2025) காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் ரத்த அழுத்தம், இருதய செயல்பாடு, கிட்னி செயல்பாடு, உள்ளிட்ட 48 நோய்களுக்கு பரிசோதனை செய்து கொள்ளலாம் இவற்றை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் அருணா கேட்டுக் கொண்டுள்ளார்.
News November 21, 2025
புதுகைக்கு மாநில பாஜக தலைவர் வருகை

தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் புதுக்கோட்டைக்கு 26ஆம் தேதி வருகை தருவதை முன்னிட்டு, ஆயத்த கூட்டம் மாவட்டத் தலைவர் ராமச்சந்திரன் தலைமையில் பாஜக அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மாநில செயற்குழு உறுப்பினர் ஏவிசிசி கணேசன் கலந்து கொண்டு பேசினார். இதில் மாநில மாவட்ட நகர ஒன்றிய நிர்வாகிகள் சார்பு அணி பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பலரும் உள்ளனர்.
News November 21, 2025
புதுகை: தொடர்ந்து வெளுத்து வாங்க போகும் மழை!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் நவ.22-ம் தேதி (இன்று) முதல் நவ.26-ம் தேதி (புதன்கிழமை) வரை இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!


