News November 25, 2024
புதுக்கோட்டை: வாக்காளர் பட்டியலில் சேர்க்க 24,869 பேர் விண்ணப்பம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகள் உட்பட்ட அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கடந்த 16,17- ந் தேதிகளிலும் நேற்று முன்தினம், நேற்று சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் 18 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஆர்வமுடன் விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில் மாவட்டத்தில் நடைபெற்ற சிறப்பு முகாமில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மொத்தம் 24,869 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
Similar News
News December 2, 2025
புதுக்கோட்டை: பைக் மோதி முதியவர் பரிதாப பலி

ஆலங்குடி அடுத்த கலிபுல்லா நகரை சேர்ந்தவர் கணேசன் (75). இவர் சில நாட்களுக்கு முன்பு ஆலங்குடி ஐயப்பன் கோவில் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிள் மோதியதில், படுகாயமடைந்த அவர் புதுகை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த கணேசன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து ஆலங்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News December 2, 2025
புதுக்கோட்டை: இரவு நேர ரோந்து பணி காவலர்கள் விவரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (டிச.,1) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!
News December 2, 2025
புதுக்கோட்டை: இரவு நேர ரோந்து பணி காவலர்கள் விவரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (டிச.,1) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!


