News October 23, 2024
புதுக்கோட்டை வழியாக இயக்கப்படும் ரயில் ரத்து

வங்கக் கடலில் உருவாகும் தானா புயல் ஒடிசா மேற்குவங்க மாநிலம் நோக்கி நகரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இதையடுத்து ஒடிசாவிற்கு இயக்கப்படும் சில எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் புதுக்கோட்டை வழியாக இயக்கப்படும் நெல்லை- ஷாலிமார் சிறப்பு ரயில், புவனேஸ்வரில் இருந்து வரும் ராமேஸ்வரம் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஷேர் செய்யவும்
Similar News
News November 25, 2025
புதுக்கோட்டை அருகே இன்று பந்த்

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள பிசினந்தூர் பகுதியில் உயிரி மருத்துவ ஆலை ஆமைய உள்ளது. இதனை கண்டித்து, அப்பகுதி கிராம மக்கள், தங்கள் வாழ்வாதாரத்திற்கு கேடு விளைவிக்கும் ஆளை வேண்டாம் என்று கூறி கடந்த ஒரு மாத காலங்களாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் ஒருபகுதியாக, இன்று (நவ.25) கந்தர்வகோட்டை நகர் பகுதியில் உள்ள வர்த்தக சங்கம் முழுநேர கடையடைப்பு அறிவிக்கப்பட்டது.
News November 25, 2025
புதுகை: 10TH போதும்! அஞ்சலகங்களில் வேலை வாய்ப்பு

புதுகை மாவட்டத்தில் உள்ள அஞ்சலகங்களில் ஆயுள் காப்பீட்டுக்காக நேரடி முகவர்கள், கள அலுவலர்கள் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 18 வயதில் நிரம்பி 10ம் வகுப்பு முடித்தவர்கள், Ex ராணுவத்தினர் Ex அரசு ஊழியர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் டிச.3 முதல் 5ம் தேதி வரை நேர்காணலில் கலந்து கொள்ளலாம். மேலும் தகவலுக்கு 04322-221220 தொடர்பு கொள்ள அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
News November 25, 2025
புதுகை: மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தற்கொலை

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அடுத்த சுல்லானியை சேர்ந்தவர் ஆத்மநாதன்(31). இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்ட நபர். இந்நிலையில் நேற்று சுல்லானியில் உள்ள அவரது இல்லத்தில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தாய் வசந்தா(50) அளித்த புகாரின் பேரில் மீமிசல் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


