News April 18, 2025
புதுக்கோட்டை: ரேஷன் தொடர்பான புகார் அளிக்க சிறப்பு எண்!

தமிழகத்தில் பல திட்டங்கள் மக்கள் நன்மைக்காக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதிலொன்றுதான் மக்களுக்கு இலவசம் (ம) குறைந்த விலையில் ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம். தங்கள் பகுதியில் உள்ள ரேஷன் தொடர்பான புகார்களை, உங்கள் மாவட்டத்தில் சம்பந்தப்பட்ட துறைக்கு 9445000311, 9445000924 ஆகிய எண்களில் புகார் அளிக்கலாம். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.
Similar News
News December 14, 2025
புதுகை: சூதாடிய மூவர் கைது

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அடுத்த களமாவூர் ஆற்றுப் பாலம் அருகே ஸ்ரீதரன் (27), ராமன் (45), சங்கிலி முத்து (44) ஆகிய மூவரும் நேற்று சூதாட்டம் விளையாடிக் கொண்டிருந்தனர். இதனை அடுத்து அந்த வழியே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கீரனூர் காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 52 கார்டுகளையும் ரூ. 1370யும் பறிமுதல் செய்து பிணையில் விடுவித்தனர்.
News December 14, 2025
புதுகை: அரசு பஸ்சில் செல்வோர் கவனத்திற்கு…

புதுகை மக்களே, அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகள், தங்களது புகார்களை தெரிவிக்க தமிழ்நாடு போக்குவரத்து கழகம் ‘1800 599 1500’ என்ற கட்டணமில்லா புகார் எண்ணை அறிவித்துள்ளது. இதன் மூலம் பயணிகளை ஏற்ற மறுப்பது, பேருந்து நிறுத்தத்தில் பஸ் நிற்காமல் செல்வது, தாமதமாக வருவது, சில்லறை பிரச்சனை, ஓட்டுநர் அல்லது நடத்துநரின் தவறான நடத்தை போன்ற புகார்களை பயணிகள் தெரிவிக்கலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க!
News December 14, 2025
புதுகை: சரக்கு வாகனம் மோதியதில் இருவர் படுகாயம்

புதுக்கோட்டை மருங்கி பட்டியிலிருந்து கன்னியாபட்டிக்கு வீரக்குமார் (33) இவரது தாய் பப்பு (65) ஆகிய இருவரும் நேற்று பைக்கில் சென்றுள்ளனர். அப்போது கீரனூர் பெட்ரோல் பங்க் அருகே, அவருக்கு பின்னால் டாட்டா ஏஸ் வாகனத்தை ஓட்டி வந்த லோகநாதன் (37) மோதியதில் பைக்கில் வந்த இருவரும் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


