News May 17, 2024

புதுக்கோட்டை: மூன்று நாட்களுக்கு சூறைக்காற்று

image

புதுக்கோட்டை மாவட்டம், கடலோரப் பகுதிகளில் இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு (மே.17- 20) பலத்த சூறைக்காற்று வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. காற்று மணிக்கு 40 முதல் 45 கி.மீ வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Similar News

News October 14, 2025

புதுகை: பைக் மோதி பெண் கவலைக்கிடம்

image

திருமயம் அருகே வெங்களூரிலிருந்து அம்மாபட்டிக்கு கலியபெருமாள்(75), ரோகினி (18) ஆகிய இருவரும் பைக்கில் சென்றுள்ளனர். அப்போது அம்மாபட்டி அரசு கலைக்கல்லூரி அருகே உள்ள சாலையில் அவருக்கு பின்னால் பைக்கை ஓட்டி வந்த ரகு (55) மோதியதில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதில் ரோகினி படுகாயமடைந்து மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்

News October 14, 2025

புதுகை: நடுரோட்டில் பெண்ணிடம் செயின் பறிப்பு!

image

அகரப்பட்டியை சேர்ந்தவர் சசிகலா, இவர் இன்று வேலையின் காரணமாக மோட்டார் சைக்கிளில் மேட்டுதெரு முக்கம் அருகே சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த மர்ம நபர் சசிகலாவின் கழுத்தில் இருந்த 3 பவுன் தங்க செயினை அறுத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இது குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்ட நிலையில் செயினை பறித்த திருக்கோகர்ணம் கோவில்பட்டியை சேர்ந்த விக்னேஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

News October 14, 2025

புதுக்கோட்டை: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று(அக்.13) இரவு 10 மணி முதல் இன்று(அக்.14) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனைமற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!