News August 17, 2024
புதுக்கோட்டை மீனவர்கள் விடுவிப்பு

ஜூலை 1ஆம் தேதி கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த புதுக்கோட்டை மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் நேற்று அவர்களை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது. அவர்கள் நேற்று இரவு சென்னைக்கு விமான நிலையம் வந்து அங்கிருந்து பேருந்து மூலம் புதுக்கோட்டைக்கு வந்தனர். இதனால் அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஷேர் செய்யவும்
Similar News
News November 1, 2025
புதுக்கோட்டை: பணியில் இருந்த எஸ்.ஐ உயிரிழப்பு

புதுகை மாவட்டம் கந்தா்வகோட்டை, வீரப்பட்டி பகுதியைச் சோ்ந்த வீராச்சாமி (48) திருவாரூா் மாவட்ட ஆயுதப்படையில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தாா். இந்நிலையில், வியாழக்கிழமை இரவு ஊா்க்காவல் படை அலுவலகத்தில் இரவு நேர பணியில் இருந்த வீராச்சாமி, உட்காா்ந்த நிலையிலேயே உயிரிழந்து கிடந்துள்ளார். அதைத் தொடர்ந்து அவரது உடல் திருவாரூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டது.
News November 1, 2025
புதுக்கோட்டை: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (அக்.31) இரவு 10 மணி முதல் இன்று (நவ.01) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!
News October 31, 2025
43 ஊராட்சிகளில் நாளை சிறப்பு கிராம சபை கூட்டம்

அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம் 43 ஊராட்சிகளில் உள்ளாட்சி தின கிராமசபைக் கூட்டம் நாளை (நவ.01) நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் பொதுநிதி செலவினம் குறித்து விவாதித்தல், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள பிடிஒ வேலு கேட்டுக்கொண்டுள்ளார்.


