News August 17, 2024

புதுக்கோட்டை மீனவர்கள் விடுவிப்பு

image

ஜூலை 1ஆம் தேதி கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த புதுக்கோட்டை மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் நேற்று அவர்களை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது. அவர்கள் நேற்று இரவு சென்னைக்கு விமான நிலையம் வந்து அங்கிருந்து பேருந்து மூலம் புதுக்கோட்டைக்கு வந்தனர். இதனால் அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஷேர் செய்யவும்

Similar News

News November 15, 2025

புதுகை: அரசு வேலை – கடைசி வாய்ப்பு

image

தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் பணிக்கு (Health Inspector Grade-II) 1429 காலி பணியிடங்களை நிரப்பப்படவுள்ளது. இதற்கு 12-ம் வகுப்பு மற்றும் 2 வருட சுகாதார பணியாளர் படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக் செய்து<<>> நாளைக்குள்ளாக (நவ.16) விண்ணப்பிக்க வேண்டும். அரசு வேலை தேடும் அனைவருக்கும் இதை SHARE பண்ணுங்க!

News November 15, 2025

புதுகை: பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை

image

புதுக்கோட்டை மாவட்ட கீரனூரைச் சேர்ந்தவர் சரவண குமார் (28). கூலி தொழிலாளியான இவர் 17 வயது பள்ளி மாணவியை ஆசை வார்த்தை கூறி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனை அறிந்த மாணவியின் தாயார், இது தொடர்பாக அளித்த புகாரின் பேரில் கீரனூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா போக்சோ சட்டத்தின் கீழ் சரவணகுமாரை கைது செய்தார். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.

News November 15, 2025

புதுகை: மாவட்ட அளவிலான போட்டிக்கு கலெக்டர் அழைப்பு!

image

உலக மாற்றுத்திறனாளி தனத்தை முன்னிட்டு, புதுகை மாவட்டத்தில் நவ.21 மாவட்ட அளவிலான ஓவிய போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் 10 வயதுக்கு கீழ் உள்ள மாற்றுத்திறனாளிகள் வண்ணம் தீட்டும் கோள் பயன்படுத்தியும், 11 முதல் 18 வயது வரை வாட்டர் வண்ணம் போட்டியும், 18 மேற்பட்டவர்கள் எதை வேண்டுமானாலும் பயன்படுத்தி வண்ணம் தீட்டலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!