News January 22, 2025

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று மின்தடை

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பல்வேறு துணை மின் நிலையங்களில் இன்று (ஜன.22) மாதாந்தர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் அரவம்பட்டி, மங்கனூர், வடுகபட்டி, பெருங்கலூர், வீரடிப்பட்டி, கள்ளாக்கோட்டை, மட்டங்கால், வராப்பூர், கந்தர்வக்கோட்டை மற்றும்
அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT.

Similar News

News November 25, 2025

புதுகையில் 21 பேர் மீது வழக்கு பதிவு!

image

கூழையன்காட்டில் தனி நபருக்கு சொந்தமான இடத்தில் உள்ள 2 கிணறுகளில் குப்பை கழிவுகளை ஆலங்குடி பேரூராட்சி ஒப்பந்ததாரர் கொட்டினார். இதனால் நிலத்தடி நீர் மாசடைந்து விட்டதாக கிராம மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அனுமதியின்றி மறியலில் ஈடுபட்டதால் ஆலங்குடி போலீசார் புரட்சிகர கம்யூனிஸ்டு கட்சி தலைவர் சுந்தரமூர்த்தி உள்பட 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 25, 2025

புதுகை: இறந்தும் வாழும் இளம்பெண்!

image

புதுக்கோட்டையை சேர்ந்த முருகேஸ்வரி (23) என்ற இளம்பெண் சாலை விபத்தில் சிக்கி மூளைச் சாவு அடைந்தார். இந்நிலையில் அவரது கண், சிறுநீரகம் உள்ளிட்ட உடல் உறுப்புகளை அவரது குடும்பத்தினர் தானமாக வழங்கினர். இதன் மூலம் 6 பேருக்கு முருகேஸ்வரி மறுவாழ்வு அளித்துள்ள சம்பவம், அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவரது உடலுக்கு இறுதி சடங்கின் போது அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

News November 25, 2025

புதுகை: மழையால் இடிந்து விழுந்த 6 வீடுகள்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று பல்வேறு இடங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. அவ்வகையில், கறம்பகுடி அருகே புதுக்கோட்டை விடுதி கிராமத்தில் பெய்த மழையால் வெள்ளம் சூழந்தது. மேலும் அப்பகுதியில் உள்ள தரைப்பாலத்தை கால்வாய் தண்ணீர் முழுகடித்து, ஊருக்குள் நீர் புகுந்தது. இதில், சக்திவேல் என்பவரின் வீடு முழுமையாக இடிந்து விழுந்தது. மேலும் அதே பகுதியில் 5 வீடுகளின் சுவருகள் இடிந்து விழுந்து பாதிக்கப்பட்டன.

error: Content is protected !!