News April 25, 2025

புதுக்கோட்டை: தமிழ்நாடு காவல் துறையில் 1,299 காலி பணியிடங்கள்

image

தமிழ்நாட்டில் உள்ள 1,299 எஸ்.ஐ காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பாணை வெளியாகியுள்ளது. அதன்படி தாலுகாவில் 933 பணியிடங்களும், ஆயுதப்படையில் 366 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. அதன்படி ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் முடித்தவர்கள் வரும் மே 3ஆம் தேதிக்குள் அதிகாரப்பூர்வ<> இணையத்தில்<<>> விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. வேலை தேடும் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க..

Similar News

News December 22, 2025

புதுகை அருகே விபத்தில் பரிதாப பலி

image

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ராமகவுண்டம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே, வெள்ளை கண்ணு(85) என்பவர் நேற்று நடந்து சென்றுள்ளார். அப்போது அவருக்கு பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு தப்பி சென்றது. இதில் வெள்ளை கண்ணுவிற்கு பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இது குறித்து அவரது மகன் அளித்த புகாரில் விராலிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 22, 2025

புதுகை: தலை நசுங்கி துடிதுடித்து பலி!

image

கல்லுப்பட்டியை சேர்ந்தவர் செல்வம் (44). இவர் தனியார் கம்பெனியில் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவு தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் விராலிமலை அடுத்துள்ள சுங்கச்சாவடி அருகே சென்றபோது பின்னால் வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் செல்வம் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

News December 22, 2025

புதுக்கோட்டை: இரவு நேர ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!