News April 25, 2025
புதுக்கோட்டை: தமிழ்நாடு காவல் துறையில் 1,299 காலி பணியிடங்கள்

தமிழ்நாட்டில் உள்ள 1,299 எஸ்.ஐ காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பாணை வெளியாகியுள்ளது. அதன்படி தாலுகாவில் 933 பணியிடங்களும், ஆயுதப்படையில் 366 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. அதன்படி ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் முடித்தவர்கள் வரும் மே 3ஆம் தேதிக்குள் அதிகாரப்பூர்வ<
Similar News
News November 17, 2025
புதுகை: சிறுமிக்கு பாலியல் தொல்லை!

திருமயம் அருகே மணவாளக்கரை சேர்ந்த விஜயன் 58, அதே பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியை பாலியல் தொல்லை செய்துள்ளார். இதில் சிறுமி கர்ப்பமான நிலையில் அவரது தாயார் அளித்த புகாரின் பேரில் திருமயம் அனைத்து மகளிர் போலீசார் போக்ஸோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து முதியவரை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
News November 17, 2025
புதுகை: மது அருந்திவிட்டு அட்டூழியம் செய்தவர் கைது

புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் ஈபி அலுவலகம் அருகே, பெரியசாமி (38) என்பவர் நேற்று மது அருந்திவிட்டு பொதுமக்களுக்கு இடையூறு செய்து கொண்டிருந்தார். இதனை அடுத்து அந்த வழியே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த மாத்தூர் காவல்துறையினர் அவரை கைது செய்தனர். மேலும் மாத்தூர் காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி பிணையில் விடுவித்தனர்.
News November 17, 2025
புதுகை மாவட்டத்தில் மின்தடை அறிவிப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நாகுடி, கொடிகுளம், ஆவுடையார்கோயில், அமரடக்கி, வல்லவாரி ஆகிய துணைமின் நிலையங்களில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக இங்கிருந்து மின்சாரம் பெரும் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!


