News April 25, 2025

புதுக்கோட்டை: தமிழ்நாடு காவல் துறையில் 1,299 காலி பணியிடங்கள்

image

தமிழ்நாட்டில் உள்ள 1,299 எஸ்.ஐ காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பாணை வெளியாகியுள்ளது. அதன்படி தாலுகாவில் 933 பணியிடங்களும், ஆயுதப்படையில் 366 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. அதன்படி ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் முடித்தவர்கள் வரும் மே 3ஆம் தேதிக்குள் அதிகாரப்பூர்வ<> இணையத்தில்<<>> விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. வேலை தேடும் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க..

Similar News

News November 25, 2025

புதுகை: மழையால் இடிந்து விழுந்த 6 வீடுகள்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று பல்வேறு இடங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. அவ்வகையில், கறம்பகுடி அருகே புதுக்கோட்டை விடுதி கிராமத்தில் பெய்த மழையால் வெள்ளம் சூழந்தது. மேலும் அப்பகுதியில் உள்ள தரைப்பாலத்தை கால்வாய் தண்ணீர் முழுகடித்து, ஊருக்குள் நீர் புகுந்தது. இதில், சக்திவேல் என்பவரின் வீடு முழுமையாக இடிந்து விழுந்தது. மேலும் அதே பகுதியில் 5 வீடுகளின் சுவருகள் இடிந்து விழுந்து பாதிக்கப்பட்டன.

News November 25, 2025

புதுக்கோட்டை: இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

News November 24, 2025

பொன்னமராவதி: சோழீஸ்வரர் கோயிலில் 108 சங்காபிஷேக விழா

image

பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத சோழீஸ்வரர் கோயிலில் கார்த்திகை திங்கள் சோம வாரத்தை முன்னிட்டு, இன்று 108 சங்காபிஷேக விழா நடைபெற்றது. விழாவின் தொடக்கமாக சிவாச்சாரியர்கள் வழிநடத்த சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்று, பூஜையில் வைத்து பூஜிக்கப்பட்ட 108 சங்குகளில் உள்ள புனிதநீர் மூலம் சோழீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்றது.

error: Content is protected !!