News May 16, 2024
புதுக்கோட்டை ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக கூட்டத்தில் கன மழையின் காரணமாக மேற்கொள்ளப்படும் முன்னேற்பாடுகள் குறித்தும் அனைத்து துறை பணிகள் குறித்தும் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா புதுக்கோட்டை மாவட்டத்தில் புயல் வெள்ளம் சூறாவளி ஆகியவற்றால் ஏற்படும் இடர்பாடுகள் குறித்து அவசர கட்டுபாட்டு எண் -1077 அல்லது 04322-222207 ஆகிய எண்களில் தகவல் தெரிவிக்கலாம்
Similar News
News November 28, 2025
புதுக்கோட்டை: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

வங்கக் கடலில் நிலவும் ‘திட்வா’ புயல் காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வானிலை ஆய்வு மையம் மிக கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுக்கோட்டை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (நவ.28) அரைநாள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் மு.அருணா உத்தரவிட்டுள்ளார். SHARE NOW!
News November 28, 2025
புதுகை: அவசர உதவி எண்கள்!

வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘திட்வா’ புயல் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், புதுக்கோட்டை உட்பட பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் உங்கள் பகுதியில் மழை / புயலால் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை மையம் 1070, மாவட்ட பேரிடர் மேலாண்மை மையம் 1077 அழைத்தால் போதும், உடனடியாக உதவி அனுப்பி வைக்கப்படும். ஷேர் பண்ணுங்க!
News November 28, 2025
புதுகை: 350 கிலோ கெட்டுப்போன மீன் பறிமுதல்

புதுக்கோட்டை மாநகரில், மேல 3ஆம் வீதி மீன் மார்க்கெட் மற்றும் டிவிஎஸ் முக்கம் பகுதி மீன் விற்பனைப் பகுதிகளில், கெட்டுப்போன மீன்கள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியருக்கு புகார் வந்தது. இதைத் தொடர்ந்து, புதுக்கோட்டை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், இரு இடங்களிலும் திடீர் சோதனை நடத்தியதில், 350 கிலோ கெட்டுப்போன மீனை பறிமுதல் செய்து 6000 அபராதம் விதித்தனர்.


