News May 17, 2024
புதுக்கோட்டை ஆட்சியர் அறிவிப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நாட்டுப்படகுகள் 5.6.2024, 6.6.2024 தேதிகளில் சிறப்பு குழுக்கள் மூலம் நேரடி ஆய்வு செய்யப்பட உள்ளது. இந்த ஆய்வின்போது, படகு உரிமையாளர்கள் ஆதார் அட்டை , படகு பதிவு சான்றிதழ், டீசல் மானிய அட்டை, குடும்ப அட்டை, மீன் வளத்துறை மூலம் வழங்கப்பட்ட தொலைத் தொடர்பு சாதனங்கள் ஆகியவற்றை ஆய்வுக்குழு வசம் சமர்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.
Similar News
News December 18, 2025
புதுக்கோட்டை: 10th போதும்.. மத்திய அரசு வேலை

புதுக்கோட்டை மக்களே, பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) மூலம் காலியாக உள்ள 25,487 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: 10th Pass
3. சம்பளம்: ரூ.21,700 – ரூ.69,100
4. வயது வரம்பு: 18-23 (SC/ST–28,OBC–26)
5. கடைசி தேதி : 31.12.2025,
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
இத்தகவலை SHARE செய்து மற்றவர்களுக்கும் உதவுங்க.
News December 18, 2025
புதுக்கோட்டை: நாயால் பறிபோன உயிர்

ஆலங்குடி அடுத்த திருவரங்குளம் பேருந்து நிறுத்தம் அருகே கடந்த 2-ம் தேதி ஷாஜகான் (55) என்பவர் பைக்கில் சென்றுள்ளார். அப்போது நாய் குறுக்கே வந்ததால் பைக்கில் இருந்து தடுமாறி கீழே விழுந்த ஷாஜகான் படுகாயம் அடைந்தார். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மகன் அளித்த புகாரில் ஆலங்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 18, 2025
புதுக்கோட்டை: இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!


