News May 17, 2024
புதுக்கோட்டை ஆட்சியர் அறிவிப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நாட்டுப்படகுகள் 5.6.2024, 6.6.2024 தேதிகளில் சிறப்பு குழுக்கள் மூலம் நேரடி ஆய்வு செய்யப்பட உள்ளது. இந்த ஆய்வின்போது, படகு உரிமையாளர்கள் ஆதார் அட்டை , படகு பதிவு சான்றிதழ், டீசல் மானிய அட்டை, குடும்ப அட்டை, மீன் வளத்துறை மூலம் வழங்கப்பட்ட தொலைத் தொடர்பு சாதனங்கள் ஆகியவற்றை ஆய்வுக்குழு வசம் சமர்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.
Similar News
News December 8, 2025
JUST IN புதுகை: சிறை கைதி தூக்கிட்டு தற்கொலை

ஆவுடையார் கோவிலில் கடந்த சில ஆண்டுகளுக்கு இரட்டைக் கொலை வழக்கில் திருச்சி துறையூர் சேர்ந்த ஹானஸ்ட் ராஜ் கைது செய்யப்பட்டு புதுக்கோட்டை மத்திய சிறையில் இருந்துள்ளார். இந்நிலையில் திடீரென அவர் சிறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அவரது உடலை கைப்பற்றிய நகர காவல் உடற்கூறு ஆய்வுக்காக துறையினர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
News December 8, 2025
புதுகை: மாடு வாங்க ரூ.1.2 லட்சம் கடன் உதவி

தமிழக அரசின் TABCEDCO மூலம் ஒரு பயனாளிக்கு, 2 கறவை மாடுகள் வாங்க ரூ.1,20,000 கடனுதவி வழங்கப்படுகிறது. இந்த கடனை திருப்பி செலுத்த 3 ஆண்டுகள் கால அவகாசமும் உண்டு. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் tabcedco.net என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். குறிப்பு: கடனுதவி பெற மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!
News December 8, 2025
புதுகை: மதுபோதையில் அட்டகாசம்!

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் லட்சுமி தியேட்டர் அருகே சின்னையா (52) என்பவர் நேற்று மது அருந்திவிட்டு பொதுமக்களுக்கு இடையூறு செய்து கொண்டிருந்தார். இதனை அடுத்த அந்த வழியிலிருந்து பணியில் ஈடுபட்டிருந்த கீரனூர் காவல்துறையினர் அவரை கைது செய்தனர். மேலும் சின்னையாவிடம் விசாரணை மேற்கொண்டு பிணையில் விடுவித்தனர்.


