News March 28, 2024

புதுக்கோட்டை அருகே விபத்து; 3 பேரின் நிலை?

image

ஆலங்குடி அருகே கம்மங்காடு மேலப்பட்டியை சேர்ந்தவர்
ராஜேஷ் அவரது மகன் ரோகித் இவர்கள் இருவரும் நேற்று மோட்டார் சைக்கிளில் வாரச்சந்தைக்கு சென்று வீட்டு வீட்டிற்கு திரும்பிய போது அந்த வழியாக மேலப்பட்டியை சேர்ந்த தர்மராஜ் அதேபகுதியை குணா ஆகியோர் வந்த மோட்டார் சைக்கிளும், ராஜேஷ் வந்த மோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியது. இதில் ராஜேஷ், ரோகித், விஷ்ணு ஆகிய 3 பேரும் படுகாயமடைந்தனர்.

Similar News

News November 28, 2025

BREAKING புதுக்கோட்டை: பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

image

வங்கக்கடலில் நிலவி வரும் டிட்வா புயல் காரணமாக தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு நாளை (நவ.,29) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது என்றும், மீறி நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE NOW!

News November 28, 2025

புதுக்கோட்டை: அடையாளம் தெரியாத சடலம் மீட்பு

image

கே.புதுப்பட்டியில் சுமார் 20 வருடங்களாக பிச்சை எடுத்து, வசித்து வந்த 85 வயது முதியவர் வயது முதிர்வு காரணமாக காமண்டி முக்கம் அருகில் இறந்த கிடந்தார். அவர் யார் எந்த ஊர் என்பது தெரியவில்லை. அவரது உடலை கைப்பற்றிய காவல் துறையினர் உடல்கூறு ஆய்வுக்காக புதுகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவரைப் பற்றி தெரிந்தால் 94988100761 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என இன்ஸ்பெக்டர் தங்கம் தெரிவித்துள்ளார்.

News November 28, 2025

புதுக்கோட்டை மாவட்டத்தை புரட்டி போட போகும் புயல்

image

வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘திட்வா’ புயல் தொடர்ந்து வடமேற்கு திசையை நோக்கி வருகிறது. இது புதுக்கோட்டை மாவட்டத்தை ஒட்டிய கடற்பகுதியை கடந்து செல்லக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை (நவ.29) பலத்த சூறைக்காற்றுடன் கூடிய அதிகனமழை கொட்டித் தீர்க்க கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எனவே பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!