News March 28, 2024

புதுக்கோட்டை அருகே துடிதுடித்து மரணம்

image

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே மாங்குடி கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார் (28) இவர் அதே பகுதியில் உள்ள குளத்தில் நேற்று குளிக்கச் சென்றார்.ஆழமான பகுதிக்கு சென்ற அவர் நீரில் மூழ்கினார்.நீச்சல் தெரியாததால் மூச்சுத்திணறி உயிரிழந்தார். இதுகுறித்து அறந்தாங்கி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இச்சமபவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Similar News

News November 9, 2025

புதுகை: டாஸ்மாக் கடைகளை மூட கலெக்டர் உத்தரவு!

image

புதுகை மாவட்டத்தில் நாளை (நவ.10) கீரனூர் அருகே களமாவூர் தனியார் பொறியியல் கல்லூரியில், தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்டங்களை வழங்க உள்ளார். இதனை முன்னிட்டு, கீரனூர் மற்றும் அதன் சுற்றியுள்ள 5 டாஸ்மார்க் கடைகள், 2 மனமகிழ் மன்றம், மாத்தூரில் உள்ள ஒரு டாஸ்மார்க் மதுபான கடை மற்றும் மனமகிழ் மன்ற மதுபான கடை என மொத்தம் ஒன்பது கடைகளை மூட கலெக்டர் அருணா உத்தரவிட்டுள்ளார்.

News November 9, 2025

புதுகை: வாட்ஸ்அப் வழியாக கேஸ் புக்கிங்!

image

வாட்ஸ்அப் மூலமாக கேஸ் சிலிண்டர் புக் செய்வது மிகவும் எளிதான மற்றும் விரைவான வழியாகும். இண்டேன் (Indane): 7588888824, பாரத் கேஸ் (Bharat Gas): 1800224344, ஹெச்பி கேஸ் (HP Gas): 9222201122. மேற்கண்ட எண்களில் உங்கள் கேஸ் நிறுவனத்தின் எண்ணை போனில் SAVE செய்துவிட்டு, வாட்ஸ்அப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!

News November 9, 2025

புதுகை: புதிய தொழில் தொடங்க மானியத்துடன் கடன்

image

தமிழக அரசு சிறு தொழில் வளர்ச்சிக்கான மானியத்துடன் கூடிய ரூ.10 லட்சம் முதல் 5 கோடி வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் 25 % அல்லது 75 லட்சம் தமிழக அரசு மானியமாக வழங்குகிறது. இதற்கு 12th தேர்ச்சி பெற்ற, 21 வயது பூர்த்தியடைந்த புதிய தலைமுறை தொழில் முனைவோர் www.msme online.tn.gov.in/neets என்ற இணைய முகவரியில் விண்ணப்பித்து, அதனை மாவட்ட தொழில் மையத்தில் கொடுக்க வேண்டும் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!