News March 28, 2024

புதுக்கோட்டை அருகே துடிதுடித்து மரணம்

image

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே மாங்குடி கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார் (28) இவர் அதே பகுதியில் உள்ள குளத்தில் நேற்று குளிக்கச் சென்றார்.ஆழமான பகுதிக்கு சென்ற அவர் நீரில் மூழ்கினார்.நீச்சல் தெரியாததால் மூச்சுத்திணறி உயிரிழந்தார். இதுகுறித்து அறந்தாங்கி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இச்சமபவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Similar News

News December 22, 2025

புதுகை மாவட்டத்தில் மின்தடை அறிவிப்பு!

image

புதுகை மாவட்டத்திலுள்ள ஆதனக்கோட்டை, கந்தர்வகோட்டை, மங்கலக்கோயில், குன்றாண்டார்கோயில், கீரமங்கலம், ஆவணத்தான்கோட்டை ஆகிய துணைமின் நிலையங்களின் இன்று (டிசம்பர் 22) பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. எனவே இங்கிருந்து மின்சாரம் பெரும் அனைத்து பகுதிகளிலும் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளது. இதனை அனைவர்க்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்கள்

News December 22, 2025

புதுகை அருகே விபத்தில் பரிதாப பலி

image

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ராமகவுண்டம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே, வெள்ளை கண்ணு(85) என்பவர் நேற்று நடந்து சென்றுள்ளார். அப்போது அவருக்கு பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு தப்பி சென்றது. இதில் வெள்ளை கண்ணுவிற்கு பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இது குறித்து அவரது மகன் அளித்த புகாரில் விராலிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 22, 2025

புதுகை: தலை நசுங்கி துடிதுடித்து பலி!

image

கல்லுப்பட்டியை சேர்ந்தவர் செல்வம் (44). இவர் தனியார் கம்பெனியில் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவு தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் விராலிமலை அடுத்துள்ள சுங்கச்சாவடி அருகே சென்றபோது பின்னால் வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் செல்வம் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

error: Content is protected !!