News August 14, 2024
புதுக்கோட்டை அரசு வழக்கறிஞர் பேரில் போலி முகநூல்

புதுக்கோட்டை மாவட்ட அரசு வழக்கறிஞராக பணியாற்றி வரும் வெங்கடேசன் திமுகவில் முக்கிய நிர்வாகியாக இருந்து வருகிறார். இவர் முகநூல் பக்கத்தில் பல்வேறு பதிவுகளை வெளியிட்டு வருவது வழக்கம். இந்நிலையில் இவருடைய முகநூலை போலியாக கணக்கு துவங்கியுள்ளனர். இதனை அறிந்த வெங்கடேசன் இந்த போலி முகநூல் பக்கத்தை யாரும் நம்ப வேண்டாம் என அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
Similar News
News December 21, 2025
புதுக்கோட்டை கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

புதுகை மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் இன்று (டிச.21) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்காளர் பட்டியலில் புதியதாக வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. இதில் 18 வயது நிரம்பியவர் தங்களது பெயரை வாக்காளர், தேசிய வாக்காளர் சேவை போர்டல் (https://voters.eci.gov .in) மூலம் பெயர் சேர்க்கலாம் என கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.
News December 21, 2025
புதுகை: கிரைண்டர் வாங்க பணம் வேணுமா?

தமிழக அரசு சார்பில் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் பெண்கள், கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களை முன்னேற்றும் வகையில் கிரைண்டர் வாங்க மானியம் வழங்கப்படுகிறது. இதன் மூலம் மொத்த விலையில் 50% அல்லது அதிகபட்சமாக ரூ.5,000 மானியமாக வழங்கப்படும். இதற்கு 25 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் புதுகை மாவட்ட சமூக நல அலுவலகத்தில் ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, வருமானச் சான்று ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம். SHARE
News December 21, 2025
புதுகை: மருத்துவர் வீட்டில் 21 பவுன் நகை திருட்டு

புதுகை மாநகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த் (பல் மருத்துவர்). இவரது மனைவி வெள்ளிக்கிழமை இரவு வெளியூர் சென்றுள்ளார். இந்நிலையில் மருத்துவ சிகிச்சை நிலையத்தில் மருத்துவர் இருந்த நேரத்தில் மேல்தளத்தில் உள்ள மருத்துவரின் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர் உள்ளே பெட்டியில் வைக்கப்பட்டிருந்த 21 பவுன் நகைகளை திருடிச் சென்று விட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் புதுகை நகர போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


