News April 24, 2025
புதுக்கோட்டை அரசு போக்குவரத்து கழக புகார் எண் அறிவிப்பு

அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்கு புகார் எண்ணை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. பயணிகளை ஓட்டுநர், நடத்துநர்கள் ஏற்ற மறுப்பது, நிறுத்தத்தில் நிற்காமல் செல்வது, தாமதமாக பேருந்து வருவது, சில்லறை பிரச்சனை, தவறான நடத்தை போன்ற புகார்களை 1800 599 1500 இந்த கட்டணமில்லா இலவச நம்பரில் தொடர்பு கொண்டு பயணிகள் தெரிவிக்கலாம் என போக்குவரத்துத்துறை கூறியுள்ளது. அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
Similar News
News November 26, 2025
புதுக்கோட்டை: வாலிபர் கொலை வழக்கில் 2 பேர் கைது

புதுகை அருகே வட்டாபட்டாபட்டியைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் கடந்த 2 நாட்களுக்கு முன் நமணசமுத்திரம் சாலையோரம் படுகாயத்துடன் கிடந்தார். அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். விசாரணையில் அவர் அடித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. அதையடுத்து ராஜகோபாலபுரம் பகுதியை சேர்ந்த லோகேஸ்வரன், நிதீஷ்குமார் ஆகியோரை நமணசமுத்திரம் போலீசார் கைது செய்தனர்.
News November 26, 2025
JUST IN புதுக்கோட்டை: கனமழை எச்சரிக்கை!

தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று காலை புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு ‘சென்யார்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இதன் காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் வரும் நவ.28 & நவ.29 ஆகிய தேதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஷேர் பண்ணு
News November 26, 2025
புதுகை: கார்த்திகை தீபத்தை முன்னிட்டு சிறப்பு ரயில் இயக்கம்

கார்த்திகை தீபம் விழா அடுத்த மாதம் டிச.3ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இந்நிலையில், கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு திருநெல்வேலியில் இருந்து காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி வழியாக திருநெல்வேலி – திருவண்ணாமலை சிறப்பு ரயில் இயக்கப்படுவதால் பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது.


