News April 29, 2025
புதுக்கோட்டையில் மே.1 மதுபான கடைகளுக்கு விடுமுறை – ஆட்சியர்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இயங்கும் அனைத்து மதுபான கடை மற்றும் மதுபான கூடங்கள் அனைத்தும் டாஸ்மார்க் மதுபான கடைகள் மற்றும் மதுபான கூடங்கள் (மே.1) “உழைப்பாளர் தினத்தை ” முன்னிட்டு மதுக்கடைகள் இயங்காது எனவும் அன்று சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அருணா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
Similar News
News July 11, 2025
புதுகை: பயிர் காப்பீடு திட்டத்தில் பதிய அறிவுறுத்தல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் விவசாயிகள் குருவை மற்றும் காரிப் பயிர்களுக்கு ஜூலை 31ஆம் தேதிக்குள் காப்பீடு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அருணா அறிவித்துள்ளார். இந்த திட்டத்தில் பயிர் கடன் பெறும் விவசாயிகள், கடன் பெறும் வங்கிகளிலும், கடன் பெறாத விவசாயிகள் பொதுசேவை மையங்கள் மூலமாகவோ, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் வணிக வங்கிகள் மூலமாகவோ பதிவு செய்து கொள்ளலாம். (ஷேர் பண்ணுங்க)
News July 10, 2025
புதுகையில் நாளை வேலைவாய்ப்பு முகாம்!

புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், நாளை (ஜூலை 11) தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில், காலை 10 முதல் 15 மேற்பட்ட முக்கிய நிறுவனங்கள் பங்கேற்கும். இம்முகாமில் 18 முதல் 35 வயதுக்குள்பட்ட 10ஆம் வகுப்பு முதல் டிகிரி முடித்தவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என கலெக்டர் மு.அருணா தெரிவித்துள்ளார். இதை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்கள்..!
News July 10, 2025
புதுகை: ரூ.755 செலுத்தினால் ரூ.15 லட்சம் வரை காப்பீடு

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். பகிரவும்