News August 16, 2024
புதுக்கோட்டையில் மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டம்

புதுக்கோட்டையில் நாளை காலை 8 மணிக்கு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 1 மணி நேரம் புறநோயாளிகள் பிரிவு புறக்கணிப்பு போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கொல்கத்தா பெண் மருத்துவரை பலாத்காரம் செய்து படுகொலை செய்ததை கண்டித்து நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் இந்திய மருத்துவ சங்கம் அறிவித்துள்ளது.
Similar News
News December 14, 2025
புதுகை: 3428 வழக்குகளுக்கு தீர்வு

புதுகை மாவட்டத்தில் சட்டப் பணிகள் ஆணையம் சார்பில் நேற்று 12 அமர்வுகள் நடந்தன. மாவட்ட நீதிமன்றத்தில் நடந்த நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி என்.செந்தில்குமார் தேசிய மக்கள் நீதி மன்றத்தை தொடங்கி வைத்தார். மாவட்ட முதன்மை நீதிபதி க.பூரண ஜெயஆனந்த் வரவேற்றார். இதில் கலெக்டர் மு.அருணா, மாவட்ட எஸ்பி அபிஷேக்குப்தா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் 3428 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
News December 14, 2025
புதுகை: வாட்ஸ்அப் வழியாக கேஸ் புக்கிங்!

வாட்ஸ்அப் மூலமாக கேஸ் சிலிண்டர் புக் செய்வது மிகவும் எளிதான மற்றும் விரைவான வழியாகும். இண்டேன் (Indane): 7588888824, பாரத் கேஸ் (Bharat Gas): 1800224344, ஹெச்பி கேஸ் (HP Gas): 9222201122. மேற்கண்ட எண்களில் உங்கள் கேஸ் நிறுவனத்தின் எண்ணை போனில் SAVE செய்துவிட்டு, வாட்ஸ்அப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!
News December 14, 2025
புதுகை: சூதாடிய மூவர் கைது

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அடுத்த களமாவூர் ஆற்றுப் பாலம் அருகே ஸ்ரீதரன் (27), ராமன் (45), சங்கிலி முத்து (44) ஆகிய மூவரும் நேற்று சூதாட்டம் விளையாடிக் கொண்டிருந்தனர். இதனை அடுத்து அந்த வழியே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கீரனூர் காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 52 கார்டுகளையும் ரூ. 1370யும் பறிமுதல் செய்து பிணையில் விடுவித்தனர்.


