News August 16, 2024
புதுக்கோட்டையில் மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டம்

புதுக்கோட்டையில் நாளை காலை 8 மணிக்கு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 1 மணி நேரம் புறநோயாளிகள் பிரிவு புறக்கணிப்பு போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கொல்கத்தா பெண் மருத்துவரை பலாத்காரம் செய்து படுகொலை செய்ததை கண்டித்து நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் இந்திய மருத்துவ சங்கம் அறிவித்துள்ளது.
Similar News
News December 22, 2025
புதுகை மாவட்டத்தில் மின்தடை அறிவிப்பு!

புதுகை மாவட்டத்திலுள்ள ஆதனக்கோட்டை, கந்தர்வகோட்டை, மங்கலக்கோயில், குன்றாண்டார்கோயில், கீரமங்கலம், ஆவணத்தான்கோட்டை ஆகிய துணைமின் நிலையங்களின் இன்று (டிசம்பர் 22) பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. எனவே இங்கிருந்து மின்சாரம் பெரும் அனைத்து பகுதிகளிலும் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளது. இதனை அனைவர்க்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்கள்
News December 22, 2025
புதுகை அருகே விபத்தில் பரிதாப பலி

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ராமகவுண்டம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே, வெள்ளை கண்ணு(85) என்பவர் நேற்று நடந்து சென்றுள்ளார். அப்போது அவருக்கு பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு தப்பி சென்றது. இதில் வெள்ளை கண்ணுவிற்கு பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இது குறித்து அவரது மகன் அளித்த புகாரில் விராலிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 22, 2025
புதுகை: தலை நசுங்கி துடிதுடித்து பலி!

கல்லுப்பட்டியை சேர்ந்தவர் செல்வம் (44). இவர் தனியார் கம்பெனியில் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவு தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் விராலிமலை அடுத்துள்ள சுங்கச்சாவடி அருகே சென்றபோது பின்னால் வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் செல்வம் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.


