News April 19, 2025
புதுக்கோட்டையில் தபால் சேவை குறை தீர்க்கும் முகாம்

புதுகை மாவட்ட அளவிலான தபால் சேவை குறைதீர்க்கும் முகாம் வருகிற 21ஆம் தேதி பகல் 12 மணி அளவில் புதுகை தலைமை தபால் நிலையம் அலுவலகம் எதிரே உள்ள “மேனா காம்ப்ளக்ஸில்” நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் பொதுமக்கள் சேமிப்பு வங்கிக் கணக்கு, காப்பீடு உள்ளிட்ட தங்களது குறைகளை நேரிலோ அல்லது கடிதம் மூலமோ தெரிவிக்கலாம் என அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் முருகேசன் தெரிவித்துள்ளார். (SHARE பண்ணுங்க)
Similar News
News December 13, 2025
புதுக்கோட்டை: பிணமாக கிடந்த இளைஞர் – அடித்துக்கொலையா?

புதுக்கோட்டை, அரசமலை – இடையன்பாறையில் இளைஞர் ஒருவர் ரத்த காயங்களுடன் இறந்து கிடப்பதாக பொன்னமராவாதி போலிசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு சென்ற போலீசார் இளைஞரின் உடலை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து விசாரணையில் இவர் இலுப்பூர் அருகே மேட்டுப்பட்டி பகுதி பாண்டியன் என்பது தெரியவந்தது. மேலும் இவரை அடித்து கொலை செய்துள்ளனரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 13, 2025
புதுக்கோட்டை: அரசு பஸ் கண்டக்டரை தாக்கி பைக் கொள்ளை

புதுக்கோட்டை மாவட்டம் வாழமங்கலத்தைச் சேர்ந்த கிருஷ்ணன்(55), என்பவர் அரசு பேருந்தில் நடத்துனராக பணிபுரிந்து வருகிறார். இவர் வியாழன் நள்ளிரவு பணிமுடித்து பைக்கில் வீடு திரும்பும் போது கே.ராசியமங்கலம் பகுதியில் அடையாளம் தெரியாத 2 பேர், அவரை தாக்கி பைக், செல்போனை பறித்து சென்றுள்ளனர். இதில், காயமடைந்த அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து ஆலங்குடி போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
News December 13, 2025
புதுக்கோட்டை:இரவு நேர ரோந்து பணி காவலர்கள் விவரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று டஇரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!


