News April 19, 2025
புதுக்கோட்டையில் தபால் சேவை குறை தீர்க்கும் முகாம்

புதுகை மாவட்ட அளவிலான தபால் சேவை குறைதீர்க்கும் முகாம் வருகிற 21ஆம் தேதி பகல் 12 மணி அளவில் புதுகை தலைமை தபால் நிலையம் அலுவலகம் எதிரே உள்ள “மேனா காம்ப்ளக்ஸில்” நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் பொதுமக்கள் சேமிப்பு வங்கிக் கணக்கு, காப்பீடு உள்ளிட்ட தங்களது குறைகளை நேரிலோ அல்லது கடிதம் மூலமோ தெரிவிக்கலாம் என அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் முருகேசன் தெரிவித்துள்ளார். (SHARE பண்ணுங்க)
Similar News
News December 4, 2025
புதுகை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

அரிமளம் கே புதுப்பட்டி கழனிவாசல் அரசு மேல்நிலைப் பள்ளியில் 06.12.2025, காலை 9 மணிக்கு நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் அனைத்து மருத்துவ சேவைகளும் பரிசோதனை இலவசமாக செய்யப்படும். இதில் சிறுநீரக பாதுகாக்கும் சீர்மிகு திட்டம் புற்றுநோய் கண்டறியும் பரிசோதனைகள் போன்ற பல்வேறு சுகாதார திட்டங்கள் மூலம் இலவசமாக பரிசோதனை செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார்
News December 4, 2025
புதுகை: SBI வங்கியில் வேலை.. தேர்வு கிடையாது!

புதுகை மக்களே, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 20 – 35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள், வரும் டிச.23-க்குள் <
News December 4, 2025
புதுகை அருகே லாரி கவிழ்ந்து விபத்து!

ஆந்திராவிலிருந்து கீரமங்கலத்திற்கு 10 டன் எடை கொண்ட மிளகாய் பொடி மூட்டைகள் மற்றும் மிளகாய் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் நேற்று அதிகாலை ரெங்கம்மாள் சத்திரம் பகுதியில் வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலை ஓரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர் எந்த வித காயமுமின்றி உயிர்தப்பினார். இதையடுத்து கிரேன் உதவியுடன் லாரியை மீட்கப்பட்டது.


