News August 17, 2024

புதுக்கோட்டையில் டிஎஸ்பிகள் பணியிட மாற்றம்

image

தமிழ்நாடு முழுவதும் 33 டிஎஸ்பிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி டிஎஸ்பி ஆக இருந்த பால்ராஜ் திண்டுக்கல் மாவட்டம் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் ஆணைய டிஎஸ்பியாகவும், புதுக்கோட்டை மாவட்டம் மதுவிலக்கு அமலாக்கத்துறை டிஎஸ்பியாக இருந்த செந்தில் இளைஞரணி மதுரை சிவில் சப்ளை டிஎஸ்பி ஆகவும் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Similar News

News December 20, 2025

புதுகை: MLA சி.விஜயபாஸ்கர் வழக்கு ஒத்திவைப்பு

image

விராலிமலை எம்எல்ஏ சி.விஜயபாஸ்கர், கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் அமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக ரூ.35.79 கோடி மதிப்பில் சொத்து சேர்த்ததாக மாநில ஊழல் தடுப்பு போலீசார் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நேற்று மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. சி.விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில் வழக்கை வரும் ஜன.27ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

News December 20, 2025

புதுக்கோட்டை: இன்று இங்கெல்லாம் மின்தடை!

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருமயம், புதுக்கோட்டை, சிப்காட், அன்னவாசல் ஆகிய துணை மின் நிலையங்களில் இன்று (டிச.20) பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக இங்கிருந்து மின் விநியோகம் பெரும் பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 20, 2025

புதுக்கோட்டை: இரவு நேர ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!