News August 17, 2024

புதுக்கோட்டையில் டிஎஸ்பிகள் பணியிட மாற்றம்

image

தமிழ்நாடு முழுவதும் 33 டிஎஸ்பிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி டிஎஸ்பி ஆக இருந்த பால்ராஜ் திண்டுக்கல் மாவட்டம் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் ஆணைய டிஎஸ்பியாகவும், புதுக்கோட்டை மாவட்டம் மதுவிலக்கு அமலாக்கத்துறை டிஎஸ்பியாக இருந்த செந்தில் இளைஞரணி மதுரை சிவில் சப்ளை டிஎஸ்பி ஆகவும் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Similar News

News January 7, 2026

புதுக்கோட்டை: பொங்கல் பரிசு வரலையா..? உடனே CALL!

image

புதுக்கோட்டை மக்களே, பொங்கல் பரிசுத் தொகுப்புடன் சேர்த்து ரூ.3000 பணத்தை, வரும் ஜன.13-ம் தேதிக்குள் அனைவருக்கும் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் இதனை பெறுவதில் ஏதாவது சிக்கல் ஏற்பட்டாலோ, ஸ்டாக் இல்லை என அலுவலர்கள் பதிலளித்தாலோ அல்லது டோக்கன்கள் வீடுகளுக்கு சென்று வழங்கப்படாமல் இருந்தால், உடனே 1967 (அ) 1800-425-5901 என்ற எண்ணை தொடர்பு கொண்டு நீங்கள் புகார் அளிக்கலாம். SHARE பண்ணுங்க!

News January 7, 2026

புதுக்கோட்டை: சிறப்பு ரயில்கள் இயக்கம்

image

பொங்கல் பண்டிகையை ஒட்டி புதுக்கோட்டை வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. அதன்படி கன்னியாகுமரி தாம்பரம் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் ஜன.13, 20ம் தேதி கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு புதுகைக்கு அடுத்த நாள் அதிகாலை 3.03 மணிக்கு வந்து 3.05 மணிக்கு புறப்படும். இதேபோல் தாம்பரம் நாகர்கோவில் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் புதுக்கோட்டைக்கு 14, 21-ந்தேதி மாலை 6.13 மணிக்கு வந்து 6.15க்கு புறப்படும். SHARE IT

News January 7, 2026

புதுக்கோட்டை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

image

கீரனூர் மின் கோட்டத்துக்கு உட்பட்ட கீரனூர், விராலிமலை, குன்றாண்டார்கோவில், கிள்ளுக்கோட்டை, மாத்தூர், தொண்டைமான் நல்லூர் ஆகிய பகுதிகளுக்கான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை கீரனூர் செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. புதுகை மேற்பார்வை பொறியாளர் பொன் ஜெயமேரி தலைமையில் காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை கூட்டம் நடைபெறும். இதில், பொதுமக்கள் தங்களின் குறைகளை தெரிவிக்கலாம். SHARE IT

error: Content is protected !!