News August 17, 2024

புதுக்கோட்டையில் டிஎஸ்பிகள் பணியிட மாற்றம்

image

தமிழ்நாடு முழுவதும் 33 டிஎஸ்பிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி டிஎஸ்பி ஆக இருந்த பால்ராஜ் திண்டுக்கல் மாவட்டம் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் ஆணைய டிஎஸ்பியாகவும், புதுக்கோட்டை மாவட்டம் மதுவிலக்கு அமலாக்கத்துறை டிஎஸ்பியாக இருந்த செந்தில் இளைஞரணி மதுரை சிவில் சப்ளை டிஎஸ்பி ஆகவும் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Similar News

News December 13, 2025

புதுக்கோட்டை: அரசு பஸ் கண்டக்டரை தாக்கி பைக் கொள்ளை

image

புதுக்கோட்டை மாவட்டம் வாழமங்கலத்தைச் சேர்ந்த கிருஷ்ணன்(55), என்பவர் அரசு பேருந்தில் நடத்துனராக பணிபுரிந்து வருகிறார். இவர் வியாழன் நள்ளிரவு பணிமுடித்து பைக்கில் வீடு திரும்பும் போது கே.ராசியமங்கலம் பகுதியில் அடையாளம் தெரியாத 2 பேர், அவரை தாக்கி பைக், செல்போனை பறித்து சென்றுள்ளனர். இதில், காயமடைந்த அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து ஆலங்குடி போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

News December 13, 2025

புதுக்கோட்டை:இரவு நேர ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று டஇரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

News December 12, 2025

BREAKING: புதுக்கோட்டையில் லஞ்சம் வாங்கிய போலீஸ் கைது

image

புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை காவல் நிலையத்தில் சங்கர் என்பவர் எஸ்ஐ-யாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இன்று அவர் நிலம் தொடர்பான பிரச்சனையில் சிஎஸ்ஆர் போடுவதற்கு ரூ.10,000 லஞ்சம் வாங்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த தகவல் அறிந்த லஞ்சஒழிப்பு துறையினர் சங்கரை கையும் களவுமாக கைது செய்தனர்.

error: Content is protected !!