News August 16, 2024

புதுக்கோட்டை கலெக்டர் வேதனை

image

புதுக்கோட்டை மாவட்டம் பூங்குடி கிராமத்தில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியா் அருணா நேற்று கலந்து கொண்டாா். அப்போது, பேசிய அவர், “புதுக்கோட்டை மாவட்டத்தில் குழந்தைகளை கருவிலேயே அழிக்கும் செயல் அதிகமாக உள்ளது” என வேதனையுடன் தெரிவித்தார். மேலும், “இதுபோன்ற சட்டவிரோத செயல்களை யாரும் செய்ய வேண்டாம். பெண்ணாக இருந்தாலும், ஆணாக இருந்தாலும் கல்வியை கொடுத்தால் உயர்வார்கள்” என்றார்.

Similar News

News November 12, 2025

புதுகை: புனித பயணம் செல்ல அரசு மானியம்!

image

புதுகை மாவட்ட கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் புனித பயணம் செல்ல ஒருவருக்கு ரூ.37,000, கன்னியாஸ்திரிகளுக்கு ரூ.60,000 ECS முறையில் நேரடி மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் 1.1.25க்கு பிறகு ஜெருசலம் பயணம் மேற்கொண்ட கிறிஸ்தவர் மத பயனாளிகள் விண்ணப்பங்களை www.bcmbcmw.tn gov.in இணையத்தில் பதிவிறக்கம் செய்து, அதனை பூர்த்தி செய்து 28.2.26க்குள் ஆணையர் சிறுபான்மை நலத்துறைக்கு அனுப்ப ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

News November 12, 2025

புதுகை: வாக்காளர் பெயர் சேர்க்க முக்கிய அறிவிப்பு

image

புதுகை மக்களே, உங்கள் பகுதியில் SIR படிவம் வழங்கும் போது நீங்கள் வீட்டில் இல்லையா? இதனால் உங்கள் ஓட்டுரிமை பறிபோய்விடும் என்ற கவலை உள்ளதா? கவலை வேண்டாம். இங்கே <>கிளிக்<<>> செய்து, FILL ENUMERATION FORM என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து உங்கள் வாக்காளர் அடையாள அட்டை எண் அல்லது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிட்டு உங்களால் ஆன்லைன் மூலமாக வாக்காளர் பட்டியலில் பதிவு செய்து கொள்ள முடியும்! ஷேர் பண்ணுங்க!

News November 12, 2025

புதுகை: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000 நிதியுதவி

image

தமிழக அரசு சார்பில் கர்ப்பிணி பெண்களின் நலன் கருதி, ‘டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி’ எனும் அருமையான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் கர்ப்பிணிகளுக்கு 3 தவணைகளாக ரூ.14,000 நிதியுதவியும், ரூ.4,000 மதிப்புள்ள ஊட்டச்சத்து பெட்டகமும் வழங்கப்படுகிறது. திட்டத்தில் பயன்பெற விரும்பும் கர்ப்பிணிகள் இங்கே <>க்ளிக்<<>> செய்து, விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு 9489048910. SHARE NOW

error: Content is protected !!