News March 26, 2025

புதுகை: 19-ம் நூற்றாண்டின் கல்வெட்டில் அரிய தகவல்

image

புதுகையில் நைனா ராஜூ தண்டாயுதபாணி கோவிலில் நடைபெற்று வரும் புனரமைப்பு பணியின் போது 19-ம் நூற்றாண்டு கல்வெட்டு வெளிப்பட்டது. இக்கல்வெட்டு மூலம் 1858-ம் ஆண்டு வரை, தமிழ் எண்களே பொதுமக்களின் பயன்பாட்டில் இருந்து வந்துள்ளதை உறுதி செய்கிறது. அதில் சக ஆண்டு 1777, கலியுகத்தில் 4956, ராஷச வருடம் வைகாசி மாதம், ஆங்கில வருடம் 1855 மே மாதம் எனவும், கல்வெட்டில் 4 வகையான ஆண்டு கணக்குகள் இருந்துள்ளது என்றனர்.

Similar News

News November 2, 2025

புதுக்கோட்டை: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

image

புதுக்கோட்டை மக்களே இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை (9013151515) சேமிக்க வேண்டும். இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக Hi என்று ஆங்கிலத்தில் Message அனுப்பினால் போதும். அதுவே வழிகாட்டும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்க…

News November 2, 2025

புதுக்கோட்டை: வீட்டு வரி பெயர் மாற்ற வேண்டுமா?

image

புதுக்கோட்டை மக்களே.. உங்க வீட்டு வரி பெயர் மாற்றத்திற்கு அலைச்சல் வேண்டாம். அதற்கு எளிய வழி இருக்கு! உங்க அலைச்சலை போக்க <>இங்கு <<>>க்ளிக் செய்து உங்க Add Assesment-ல் சொத்துகளை சேர்த்து பெயர் மாற்றத்தை தேர்வு செய்து சொத்து ஆவணங்களை சமர்பியுங்க. அதிகாரிகள் ஆவணங்களை சரிபார்த்த பின் வீட்டு வரி பெயர் 15-30 நாட்களில் மாறிவிடும். இத்தகவலை SHARE பண்ணுங்க.

News November 2, 2025

புதுகை: சுவர்மீது பைக் மோதி தொழிலாளி உயிரிழப்பு

image

ஆலங்குடி அருகே தவளப்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் மரியசூசை(52). தொழிலாளியான இவர் சம்பவத்தன்று பைக்கில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அரசடிபட்டி 4 ரோடு அருகில் சென்ற போது மரியசூசை ஓட்டி சென்ற பைக் எதிர்பாராதவிதமாக அப்பகுதியில் இருந்த திருமண் மண்டபத்தின் சுற்றுச்சுவரில் மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார்.

error: Content is protected !!