News March 19, 2024

புதுகை: வாக்குவாதத்தால் பிரிந்த உயிர் 

image

மழவராயன்பட்டியை சேர்ந்தவர் குமார் இவருக்கும் இவரது சகோதரர் தங்கராஜூக்கும் நீண்ட நாட்களாக பிரச்சனை இருந்து வந்த நிலையில் நேற்று இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.பின்னர் சிறிது நேரத்தில் குமாருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவரது உறவினர்கள் மீட்டு அன்னவாசல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

Similar News

News March 12, 2026

புதுக்கோட்டை: உங்களை தேடி வரும் பெட்ரோல்!

image

உங்களது டூவீலர் / காரில் நீங்கள் சென்று கொண்டிருக்கும் போது, பாதி வழியில் திடீரென பெட்ரோல் தீர்ந்து நிற்பதை விட கொடுமையான விஷயம் வேறேதுமில்லை. இதுபோன்ற சூழலில் நீங்கள் சிக்கிக் கொண்டால், பதட்டப்படாமல், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் <>’Fuel@Call’<<>> என்ற ஆப்பின் மூலம், ஆன்லைன் வழியாக பெட்ரோல்/டீசல் ஆர்டர் செய்யலாம். நீங்கள் இருக்கும் இடத்திற்கே நேரில் வந்து எரிபொருள் டெலிவரி செய்யப்படும். ஷேர் பண்ணுங்க!

News March 12, 2026

புதுக்கோட்டை: அம்பேத்கர் சிலைக்கு தலைப்பாகை – பரபரப்பு

image

புதுகை பழைய பேருந்து நிலையம் அருகே அம்பேத்கர் சிலைக்கு நேற்று மர்ம நபர்கள் தலைப்பாகை கட்டி சென்றனர். அம்பேத்கர் சிலையை சுற்றி கூண்டுகள் அமைத்து பூட்டப்பட்டுள்ளதையும் மீறி தலைப்பாகை கட்டி உள்ளனர். அதனைத் தொடர்ந்து அதிகாலை போலீசார் விரைந்து வந்து அந்த தலைப்பாகை அகற்றினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து நகர காவல் துறையினர் அப்பகுதி உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து வருகின்றனர்.

News March 12, 2026

புதுக்கோட்டை: திருமணம் ஆகாதவர்கள் விண்ணப்பிக்கலாம்

image

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அருணா செய்தி குறிப்பு வெளியிடுள்ளார். அதில், 2027 ஆட்சேர்ப்பு ஆண்டிற்கான அக்னிவீர் பொதுப்பணி பிரிவுக்கு புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த திருமணம் ஆகாத ஆண்கள் மற்றும் பெண்கள் இராணுவத்தில் பணிபுரிவதற்கு விண்ணப்பிக்கலாம் இதற்கு வருகிற ஏப்.1ஆம் தேதிக்குள்<> www.joinindianarmy.nic.in<<>> இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!