News January 1, 2025
புதுகை மாவட்டத்தில் மின்நுகர்வோர் கூட்டங்கள் அறிவிப்பு

புதுகை மாவட்டத்தில் மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டங்கள் புதுகை செயற்பொறியாளர் அலுவலகத்தில் மாதந்தோறும் முதல் வியாழக்கிழமையும், கீரனூர் செயற்பொறியாளர் அலுவலகத்தில் 3 வது வியாழக்கிழமையும், திருமயம் செயற்பொறியாளர் அலுவலகத்தில் 4 வது வியாழக்கிழமையும், ஆலங்குடி செயற்பொறியாளர் அலுவலகத்தில் 3 வது செவ்வாய்க்கிழமையும் நடைபெறும் என மேற்பார்வை பொறியாளர் த.அசோக்குமார் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 18, 2025
புதுகை: சாலை விபத்தில் கிரிக்கெட் வீரர் பரிதாப பலி

ஆலங்குடி, வம்பன் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் 24, (செப்.17) புதுகைக்கு தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் வம்பன் வேளாண் கல்லூரி அருகே செல்லும் பொழுது தூத்துக்குடியை சேர்ந்த ஊர்காவலன் 42, ஓட்டி வந்த பாரத் பெண்ட்ஸ் லாரி மோதியதில் பலத்த காயமடைந்தார். இதையடுத்து மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
News September 18, 2025
புதுகை: 10th போதும்… அரசு துறையில் வேலை!

புதுகை மக்களே நாளையே கடைசி நாள்! தேர்வு இல்லாமல் அரசு வேலையை தவறவிடாதீர்கள் ! தமிழ்நாடு அரசு எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்படவுள்ளது.10th, ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.19,500 – ரூ.71,900 வரை வழங்கப்படும். செப்.,19 நாளையே கடைசி நாள் என்பதால் வேலை தேடுபவர்கள் இங்கே<
News September 17, 2025
புதுகைள் தமிழ்நாடு சட்டப்பேரவை மதிப்பீட்டு குழு வருகை!

புதுகை மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவை மதிப்பீட்டு குழு நாளை(செப்.18) ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். இதில், நமணசமுத்திரம் PD shop, புதுகை சமூக நீதி மாணவியர் விடுதி, சிறைத்துறை நடத்தும் பெட்ரோல் பங்க், புதிய பேருந்து நிலையம், மச்சுவாடி கால்நடை பண்ணை, வேப்பங்குடி கனிம விவசாய கலந்தாய்வு, கைக்குறிச்சி நான்கு வழி சாலை, அறந்தாங்கி பரமந்தூர் கோயில் பகுதியில் ஆய்வு நடைபெறுமென கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்