News August 17, 2024
புதுகை பயணிகளுக்கு GOOD NEWS

புதுக்கோட்டை ரயில்வே துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் திருநெல்வேலியில் இருந்து புதுக்கோட்டை செல்லும் திருநெல்வேலி – பட்னா சிறப்பு ரயிலில் உள்ள முன்பதிவுகளை பயன்படுத்தி கொள்ளுமாறு அறிவித்துள்ளனர். இந்த ரயிலானது இன்று இரவு இரவு 09:45 மணிக்கு திருநெல்வேலி ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும். இந்த செய்தியை திருநெல்வேலியில் வசிக்கும் புதுக்கோட்டை மக்களுக்கு ஷேர் செய்யுங்கள்.
Similar News
News November 25, 2025
புதுக்கோட்டை மாவட்டத்திற்கு நாளை கனமழை எச்சரிக்கை

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 48 மணி நேரத்தில் புயலாக மாறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் நாளை (நவ.26) இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்கிறதா? கமமெண்டில் தெரிவிக்கவும்..
News November 25, 2025
புதுக்கோட்டை அருகே இன்று பந்த்

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள பிசினந்தூர் பகுதியில் உயிரி மருத்துவ ஆலை ஆமைய உள்ளது. இதனை கண்டித்து, அப்பகுதி கிராம மக்கள், தங்கள் வாழ்வாதாரத்திற்கு கேடு விளைவிக்கும் ஆளை வேண்டாம் என்று கூறி கடந்த ஒரு மாத காலங்களாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் ஒருபகுதியாக, இன்று (நவ.25) கந்தர்வகோட்டை நகர் பகுதியில் உள்ள வர்த்தக சங்கம் முழுநேர கடையடைப்பு அறிவிக்கப்பட்டது.
News November 25, 2025
புதுகை: 10TH போதும்! அஞ்சலகங்களில் வேலை வாய்ப்பு

புதுகை மாவட்டத்தில் உள்ள அஞ்சலகங்களில் ஆயுள் காப்பீட்டுக்காக நேரடி முகவர்கள், கள அலுவலர்கள் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 18 வயதில் நிரம்பி 10ம் வகுப்பு முடித்தவர்கள், Ex ராணுவத்தினர் Ex அரசு ஊழியர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் டிச.3 முதல் 5ம் தேதி வரை நேர்காணலில் கலந்து கொள்ளலாம். மேலும் தகவலுக்கு 04322-221220 தொடர்பு கொள்ள அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.


