News March 27, 2024
புதுகை: தேர்தல் விழிப்புணர்வு

இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவின்படி, புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் வளாகத்தில், பாராளுமன்ற பொதுத் தேர்தல் – 2024 தொடர்பாக, புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில், தேர்தல் விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்களை
மாற்றுத்திறனாளிகளுக்கு, மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சி ரம்யா இன்று வழங்கினார்.
Similar News
News November 27, 2025
புதுக்கோட்டை: வெறி நாய்கள் கடித்ததில் 6 ஆடுகள் பலி

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள சங்கம்பட்டியில் கடந்த சில நாட்களாக வெறிநாய் தொல்லை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் விவசாய நிலத்தில் மேய்ந்த ஆடுகளை வெறிநாய் கடித்ததில் 6 ஆடுகள் ரத்த வெள்ளத்தில் பலியாகின. எனவே இந்த வெறி நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
News November 27, 2025
புதுக்கோட்டை: கை விரலை கடித்து துப்பிய வாலிபர்

அன்னவாசல் அருகே வவ்வாநேரியை சேர்ந்த வெள்ளைச்சாமி. இவர் மலம்பட்டியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் சொக்கம்பட்டியை சேர்ந்த கதிரேசன் என்பவர், வெள்ளைச்சாமி கடையில் கடனாக பீடி கேட்டுள்ளார். அதற்கு வெள்ளைச்சாமி பீடி தர மறுத்ததால், ஆத்திரமடைந்த கதிரேசன் வெள்ளைச்சாமியின் கை விரலை கடித்து துண்டாக்கினார். இதுகுறித்து வெள்ளைச்சாமி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் கதிரேசனை கைது செய்தனர்.
News November 27, 2025
புதுக்கோட்டை: ரோந்து பணி காவலர்கள் விவரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் (நவம்பர் 26) இரவு 10 மணி முதல், காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள், இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!


