News August 16, 2024
புதுகை சிப்காட் பகுதிகளில் மின்தடை

புதுகை சிப்காட் துணைமின் நிலையத்தில் நாளை (ஆக 17) பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் சிப்காட்நகர், தொழிற்பேட்டை, தாவூதுமில், சிட்கோ, வாகவாசல், வடவாளம், புத்தாம்பூர், செட்டியாப்பட்டி, பாலன்நகர், அபிராமிநகர், பெரியார்நகர், ராம்நகர், ஜீவாநகர், சிட்கோ (தஞ்சை சாலை) உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை மின்விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் எஸ்.கண்ணன் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 22, 2025
புதுகை: அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவர் படுகாயம்

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள நமணசமுத்திரம் காவல் நிலைய எல்லையில், அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவர் படுகாயமடைந்து கிடந்தார். அவரை நமணசமுத்திரம் காவல்துறையினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைல்லி சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவரைப் பற்றிய தகவல் தெரிந்தால் 9498100762 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
News November 22, 2025
புதுகை: பெண்ணின் முகத்தில் மிளகாய் பொடி தூவி நகை பறிப்பு

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சண்முகநாதபுரத்தைச் சேர்ந்தவர் ராஜலெட்சுமி(45). புதுகையில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வரும் இவர். வியாழன் இரவு பேருந்தில் ஊருக்கு சென்றுள்ளார். பேருந்திலிருந்து இறங்கி ஊருக்கு நடந்து சென்றபோது மர்ம நபர்கள் அவரது முகத்தில் மிளகாய் பொடியை தூவி, அவர் அணிந்திருந்த 6 சவரன் தங்கச் சங்கிலியை பறித்து சென்றுள்ளனர். இதுகுறித்து ஆலங்குடி போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News November 22, 2025
புதுவையில் சிறுவன் தூக்கிட்டு தற்கொலை

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தாலுகா தேனூர் அருகே தச்சம்பட்டி பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவரின் மகன் மாதீஷ்(16). இவர் தச்சம்பட்டியில் உள்ள தனது பாட்டியின் வீட்டில் தங்கி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று 21/11/2025 ஆம் தேதி இரவு சாப்பிட்டுவிட்டு தூங்கியவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


