News August 16, 2024

புதுகை சிப்காட் பகுதிகளில் மின்தடை

image

புதுகை சிப்காட் துணைமின் நிலையத்தில் நாளை (ஆக 17) பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் சிப்காட்நகர், தொழிற்பேட்டை, தாவூதுமில், சிட்கோ, வாகவாசல், வடவாளம், புத்தாம்பூர், செட்டியாப்பட்டி, பாலன்நகர், அபிராமிநகர், பெரியார்நகர், ராம்நகர், ஜீவாநகர், சிட்கோ (தஞ்சை சாலை) உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை மின்விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் எஸ்.கண்ணன் தெரிவித்துள்ளார்.

Similar News

News November 28, 2025

புதுக்கோட்டை: அடையாளம் தெரியாத சடலம் மீட்பு

image

கே.புதுப்பட்டியில் சுமார் 20 வருடங்களாக பிச்சை எடுத்து, வசித்து வந்த 85 வயது முதியவர் வயது முதிர்வு காரணமாக காமண்டி முக்கம் அருகில் இறந்த கிடந்தார். அவர் யார் எந்த ஊர் என்பது தெரியவில்லை. அவரது உடலை கைப்பற்றிய காவல் துறையினர் உடல்கூறு ஆய்வுக்காக புதுகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவரைப் பற்றி தெரிந்தால் 94988100761 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என இன்ஸ்பெக்டர் தங்கம் தெரிவித்துள்ளார்.

News November 28, 2025

புதுக்கோட்டை மாவட்டத்தை புரட்டி போட போகும் புயல்

image

வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘திட்வா’ புயல் தொடர்ந்து வடமேற்கு திசையை நோக்கி வருகிறது. இது புதுக்கோட்டை மாவட்டத்தை ஒட்டிய கடற்பகுதியை கடந்து செல்லக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை (நவ.29) பலத்த சூறைக்காற்றுடன் கூடிய அதிகனமழை கொட்டித் தீர்க்க கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எனவே பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

News November 28, 2025

புதுக்கோட்டை: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

image

வங்கக் கடலில் நிலவும் ‘திட்வா’ புயல் காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வானிலை ஆய்வு மையம் மிக கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுக்கோட்டை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (நவ.28) அரைநாள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் மு.அருணா உத்தரவிட்டுள்ளார். SHARE NOW!

error: Content is protected !!