News February 17, 2025
புதுகை கல்வி கடன் பெற ஆட்சியர் அழைப்பு

புதுகை மாவட்டத்தில் மாணவர்களின் உயர்கல்விகான கனவை நனைவாக்க முன்னோடி வங்கிகளுடன் சேர்ந்து பிப்.18ஆம் தேதி காலை 10 மணிக்கு மன்னர் கல்லூரி வளாகத்தில் மெகா கல்வி கடன் மேளா நடைபெற உள்ளது. இதில் கல்வி கடன் பெறுவதற்கான முழுமையான தகவல்கள் ஆலோசனை வழங்கப்படும். இதனை நன்கு பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் அருணா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Similar News
News November 22, 2025
புதுக்கோட்டையில் கோயில் உண்டியல் திருட்டு

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே மசந்தை கிராமத்தில் உள்ள வீரமா காளியம்மன் கோயிலில் உண்டியல் திருடப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இன்று அதிகாலை பக்தர்கள் வீரமாகாளி அம்மன் கோயிலுக்கு சென்று பார்த்தபோது, அங்கு உண்டியல் இல்லை. அதனை அடுத்து வயல் பகுதியில் அந்த உண்டியல் கிடந்துள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில், அரிமளம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
News November 22, 2025
ஆண்களுக்கான நவீன வாசக்டமி – கலெக்டர் அறிவிப்பு

புதுகை மாவட்டத்தில் 21.11.25 டூ 4.12.25 வரை நவீன வாசக்டமி விழிப்புணர்வு இருவார விழா கடைபிடிக்கப்படுகிறது. அதனை முன்னிட்டு, “குடும்பத்தின் ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சிக்கான கனவு குடும்பத்தில் ஆண்கள் பங்கேற்றல் மட்டுமே நனவு” என்பதாகும். எனவே ஆண்கள் எளிமையான குடும்ப கருத்தடை செய்து கொள்ளலாம். பக்க விளைவு கிடையாது, தையல் தேவையில்லை, கடின உழைப்பு மேற்கொள்ளலாம் என கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.
News November 22, 2025
புதுக்கோட்டை: வங்கியில் வேலை! கடைசி வாய்ப்பு

பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியாக உள்ள Local Bank Officer (LBO) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: பொதுத்துறை
2. காலியிடங்கள்: 750
3. கல்வித் தகுதி: Any Bachelor Degree
4. சம்பளம்.ரூ.48,480 – 85,920/-
5. கடைசி நாள்: 23.11.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.


