News April 29, 2025
புதுகை அஞ்சலகங்களில் ஆதார் சிறப்பு முகாம்

புதுகை தலைமை அஞ்சல் அலுவலகங்களில் சித்திரை திருவிழா மெகா ஆதார் சிறப்பு முகாம் நாளையுடன் (ஏப்.30) முடிவடைகிறது. இதில் பெயர், முகவரி, செல்போன் எண் திருத்தம் செய்து கொள்ளலாம். இதற்கு பயோமெட்ரிக் திருத்தம் செய்ய ரூ.100 மட்டுமே கட்டணம் ஆகும். இந்த வாய்ப்பினை மாவட்டத்திலுள்ள 31 துணை அஞ்சலகங்களில் மூலம் பயன்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி தெரியப்படுத்துங்கள்.
Similar News
News December 2, 2025
புதுக்கோட்டை: சான்றிதழ்கள் தொலைந்து விட்டதா?

புதுகை மக்களே! 10th, 12th, Diploma Certificate தொலைந்தாலோ, கிழிந்தாலோ இனி கவலை வேண்டாம். சான்றிதழ்களை எளிமையாக பெற முடியும். அதாவது இ-பெட்டகம் என்ற செயலியில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்து OTP சரிபார்த்து உள்ளே சென்றால் போதும். உங்களுக்கு தேவையான 10th, 12th, கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க.
News December 2, 2025
புதுகை: பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய 2 பேர் கைது

அறந்தாங்கியில் உள்ள ஒரு வீட்டில் பெண்களை வைத்து விபசாரத்தில் ஈடுபடுத்துவதாக அறந்தாங்கி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் (பொ) மற்றும் போலீசார் அங்கு சென்று சோதனை செய்ததில் 2 பெண்களை வைத்து விபசாரத்தில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. இதையடுத்து புரோக்கர் உள்ளிட்ட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 2, 2025
புதுக்கோட்டை: விவசாயி எடுத்த விபரீத முடிவு

ஆலங்குடி அருகே பனங்குளம் வடக்கு கிராமத்தை சேர்ந்த களப்பையா (49). விவசாயியான இவரை கடந்த 2 நாட்களாக காணவில்லை. இந்நிலையில் அப்பகுதியில் உள்ள எலுமிச்சை தோட்டத்தில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை மீட்டு அறந்தாங்கி GHக்கு கொண்டு சென்றபோது, அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து கீரமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


