News April 12, 2025
புதுகை அஞ்சலகங்களில் ஆதார் சிறப்பு முகாம்

புதுகை தலைமை அஞ்சல் அலுவலகங்களில் வரும் 15ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை சித்திரை திருவிழா மெகா ஆதார் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் பெயர், முகவரி, செல்போன் எண் திருத்தம் செய்து கொள்ளலாம். பயோமெட்ரிக் திருத்தம் செய்ய ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும். இதனை மாவட்டத்திலுள்ள 31 துணை அஞ்சலகங்களில் நன்கு பயன்படுத்திக் கொள்ள கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் முருகேசன் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 9, 2026
பொங்கல் பரிசு – ஆட்சியர் அறிவிப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் பொதுமக்கள் சிறப்பாக பொங்கலை கொண்டாடிட 15 பொது விநியோக நியாயவிலை கடைகளில் 4,98,028 குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, சர்க்கரை, சேலை வேஷ்டி, முழு கரும்பு உட்பட ரூ.3000 வழங்கப்பட உள்ளது. இதனை 14.01.2026 வரை பொதுமக்கள் பெற்றுக் கொள்ளலாம். மேலும் பொதுமக்கள் வரிசையில் நின்று அமைதியான முறையில் பெற்றுச் செல்ல வேண்டும் என கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.
News January 9, 2026
புதுக்கோட்டை: மயங்கி விழுந்தவர் பலி

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் அடுத்த கொடகுடி கண்மாய் அருகே நேற்று முந்தினம் ராக்காயி(50) என்பவர் நடந்து சென்றுள்ளார். அப்போது உயர் ரத்த அழுத்தம் காரணமாக கொடக்குடி கண்மாய் அருகே மயங்கி விழுந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதுகுறித்து அவரது மகள் அளித்த புகாரில் கோட்டைப்பட்டினம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 9, 2026
புதுக்கோட்டை: இனி வாட்ஸ்ஆப் மூலம் வரி செலுத்தலாம்!

தமிழக அரசு, மெட்டா நிறுவனத்துடன் இணைந்து Whatsapp மூலமாக பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை பெறுதல், வரி மற்றும் மின் கட்டணம் செலுத்துதல் என 50-க்கும் மேற்பட்ட சேவைகள் பெரும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு உங்களது வாட்ஸ்ஆப்பில் இருந்து ‘78452 52525’ என்ற எண்ணிற்கு ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அத்தனை அரசு சேவைகளையும் அலைச்சல் இல்லாமல் நீங்கள் வீட்டில் இருந்தே பெறலாம்! ஷேர் பண்ணுங்க.


