News April 9, 2025

புதுகையில் ரேசன் குறித்து குறைதீர் முகாம்

image

புதுக்கோட்டையில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகத்திலும் குடும்ப அட்டை சம்பந்தப்பட்ட குறை தீர்ப்பு முகாம் ஏப்ரல் 12ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் குடும்ப அட்டைதாரர்கள் பங்கேற்று குறைகள் பெயர் நீக்கம், பெயர் சேர்த்தல் உள்ளிட்ட பணிகளை செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அருணா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Similar News

News November 25, 2025

புதுக்கோட்டை அருகே இன்று பந்த்

image

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள பிசினந்தூர் பகுதியில் உயிரி மருத்துவ ஆலை ஆமைய உள்ளது. இதனை கண்டித்து, அப்பகுதி கிராம மக்கள், தங்கள் வாழ்வாதாரத்திற்கு கேடு விளைவிக்கும் ஆளை வேண்டாம் என்று கூறி கடந்த ஒரு மாத காலங்களாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் ஒருபகுதியாக, இன்று (நவ.25) கந்தர்வகோட்டை நகர் பகுதியில் உள்ள வர்த்தக சங்கம் முழுநேர கடையடைப்பு அறிவிக்கப்பட்டது.

News November 25, 2025

புதுகை: 10TH போதும்! அஞ்சலகங்களில் வேலை வாய்ப்பு

image

புதுகை மாவட்டத்தில் உள்ள அஞ்சலகங்களில் ஆயுள் காப்பீட்டுக்காக நேரடி முகவர்கள், கள அலுவலர்கள் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 18 வயதில் நிரம்பி 10ம் வகுப்பு முடித்தவர்கள், Ex ராணுவத்தினர் Ex அரசு ஊழியர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் டிச.3 முதல் 5ம் தேதி வரை நேர்காணலில் கலந்து கொள்ளலாம். மேலும் தகவலுக்கு 04322-221220 தொடர்பு கொள்ள அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

News November 25, 2025

புதுகை: மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தற்கொலை

image

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அடுத்த சுல்லானியை சேர்ந்தவர் ஆத்மநாதன்(31). இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்ட நபர். இந்நிலையில் நேற்று சுல்லானியில் உள்ள அவரது இல்லத்தில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தாய் வசந்தா(50) அளித்த புகாரின் பேரில் மீமிசல் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!