News January 1, 2025
புதுகையில் நாளை மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய மின் பகிர்மான வட்ட கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை (02.01.25) நடைபெற உள்ளது. காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை இக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் மின் நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்களது குறையை நிவர்த்தி செய்து கொள்ளுமாறு மேற்பார்வை பொறியாளர் அசோக்குமார் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 5, 2026
புதுக்கோட்டை: கார் மோதியதில் பரிதாப பலி

புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் அருகே உள்ள சேப்பியந்தோப்பு பேருந்து நிறுத்தம் அருகே, நேற்று இரத்தினமூர்த்தி (30) நடந்து சென்றுள்ளார். அப்போது அவருக்கு பின்னால் காரை ஒட்டி வந்த காளிதாஸ் (28) மோதியதில் ரத்தினமூர்த்திக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மனைவி அஞ்சலி (28) அளித்த புகாரில் மாத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 5, 2026
புதுகை: போனில் பணம் அனுப்புவோர் கவனத்திற்கு

தற்போது அனைவரும் UPI மூலமே பணத்தை அனுப்புகின்றனர். இந்த சூழலில், தவறுதலாக மாற்றி தெரியாத நபர்களுக்கு பணத்தை அனுப்பி விட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!
News January 5, 2026
புதுகை: பைக்குகள் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் பலி

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அடுத்த தோப்புவயல் டாஸ்மாக் கடை அருகே, நேற்று முகமது நசீம் (35) பைக்கில் சென்றுள்ளார். அப்போது அவருக்கு எதிரே பைக்கை ஓட்டி வந்த வினோத் காந்தி (32) மோதியதில் முகமது நசீமிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மனைவி யாஸ்மின் (30) அளித்த புகாரில் மணமேல்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


