News April 5, 2025
புதிய மண்டலங்கள் உருவாக்கும் பணி நிறுத்தம்

சென்னையில் 15 ஆக உள்ள மண்டலங்களின் எண்ணிக்கையை 20 ஆக உயர்த்தி கடந்த மாதம் தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. ஆனால் இந்த அறிவிப்புக்கு கவுன்சிலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சென்னை மாநகராட்சி கவுன்சிலர்களின் பதவி காலம் இன்னும் 2 ஆண்டுகள் உள்ளன. எனவே, புதிய மண்டலங்களை உருவாக்க முடியாது என்பதால் அதற்கான பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
Similar News
News November 3, 2025
சென்னை: இ-சேவையில் 60 ரூபாய்க்கு இத்தனை வசதியா?

அரசு இ – சேவை மையங்களில் ஆவணங்கள் தொடர்பான பிரச்னைகளை வெறும் 60 ரூபாயில் முடித்துவிடலாம். ஆம், பிறப்பு, இறப்பு, வாரிசு, வருவாய், இருப்பிடம், சாதி, முதல் பட்டதாரி, குடிபெயர்வு, விவசாய வருமானம், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், தமிழ் வழியில் படித்ததற்கான சான்று உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கு வெறும் 60 ரூபாய் கட்டணம் போதும். வெளியே சென்று விண்ணப்பித்தால் ரூ.100+க்கு மேல் வசூலிக்கப்படும். ஷேர் பண்ணுங்க
News November 3, 2025
சென்னை: தம்பியை வெட்டி சாய்த்த தி.மு.க. நிர்வாகி

தி.நகர் மாம்பலம் நெடுஞ்சாலை பகுதியை சேர்ந்த தினகரன் (27), சரண் (24) சகோதரர்கள். இவர்கள் ஒன்றாக அமர்ந்து மது அருந்துவது வழக்கம். நேற்று வழக்கம்போல் இருவரும் மது அருந்திய போது வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த தினகரன் சொந்த தம்பி என்றும் பாராமல் கத்தியால் சாரணை வெட்டி சாய்த்து போலீசில் சரண் அடைந்துள்ளார். தினகரன், தி.மு.க.வில் முக்கிய பொறுப்பில் இருப்பதாக கூறப்படுகிறது.
News November 3, 2025
சென்னை 3ஆம் இடம் பிடித்து அதிர்ச்சி- SO SAD!

நடப்பாண்டுக்கான மத்திய அரசின் ஸ்வச் பாரத் மிஷன் மற்றும் வருடாந்திர ஸ்வச் சர்வேஷன் கணக்கெடுப்பு நடைபெற்றது. மேலும், இந்தியாவின் அசுத்தமான நகரங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் இந்தியாவிலேயே சென்னை 3ஆம் இடத்தில் உள்ளது. மேலும், மதுரை முதல் இடத்தில் உள்ளது. தமிழ் நாடின் 2 நகரங்கள் முதல் 3 இடங்களில் உள்ளன. இதுகுறித்து உங்க கருத்து என்ன கமெண்ட்ல சொல்லுங்க. மத்தவங்களும் தெரிஞ்சிக்க ஷேர் பண்ணுங்க.


