News April 5, 2025
புதிய மண்டலங்கள் உருவாக்கும் பணி நிறுத்தம்

சென்னையில் 15 ஆக உள்ள மண்டலங்களின் எண்ணிக்கையை 20 ஆக உயர்த்தி கடந்த மாதம் தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. ஆனால் இந்த அறிவிப்புக்கு கவுன்சிலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சென்னை மாநகராட்சி கவுன்சிலர்களின் பதவி காலம் இன்னும் 2 ஆண்டுகள் உள்ளன. எனவே, புதிய மண்டலங்களை உருவாக்க முடியாது என்பதால் அதற்கான பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
Similar News
News December 3, 2025
எச்சரிக்கை: செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பு!

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வினாடிக்கு 200 கன அடி உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. ஏரியில் 22 அடி எட்டியதால் உபரி நீர் திறக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 24 அடியில் 21. 96 அடியாக உயர்ந்துள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வினாடிக்கு 1350 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. மேலும், நீர் தீர்ப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
News December 3, 2025
தூய்மை பணியாளர்கள் 17-வது நாளாக உண்ணா நிலை போராட்டம்

சென்னை, அம்பத்தூரில் உள்ள உழைப்போர் உரிமை இயக்கத்தின் தலைமை அலுவலகத்தில் தூய்மை பணியாளர்கள் 17-வது நாளாக உண்ணா நிலை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாநகராட்சியின் கீழ் பணி வழங்க வேண்டும் என தூய்மை பணியாளர்கள் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக போராடி வரும் நிலையில், அடுத்த கட்ட நகர்வாக இந்த உண்ணா நிலை போராட்டம் ஆனது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
News December 3, 2025
சென்னை மக்களே உங்க போன்ல இந்த நம்பர் இருக்கா?

ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம் உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க


