News March 14, 2025
புதிய நகர் நல மையங்களில் பணியாற்ற வாய்ப்பு

நெல்லை நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தின் கீழ் புதிதாக தோற்றுவிக்கப்பட்டுள்ள நகர் நல மையங்களில் 11 மாத ஒப்பந்த அடிப்படையில் மெடிக்கல் ஆபீஸர், ஸ்டாப் நர்ஸ், பல்நோக்கு சுகாதாரப் பணியாளர், மருத்துவமனை ஊழியர் பணியிடங்களுக்கு பணியாளர் தேர்வு செய்யப்படவுள்ளனர். விண்ணப்பத்தை tirunelveli.nic.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து மார்ச்.24 க்குள் மாவட்ட சுகாதார அலுவலகத்தில் ஒப்படைக்கலாம்.
Similar News
News April 30, 2025
ஜெயக்குமார் எழுதிய கடிதம் என்னாச்சு? குற்றாலநாதன் கேள்வி

நெல்லையை சேர்ந்த இந்து முன்னணி மாநிலச் செயலாளர் குற்றாலநாதன் நேற்று (ஏப்.29) வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்படுவதாக சட்டசபையில் இன்று முதலமைச்சர் ஸ்டாலின் பேசியுள்ளார். காங்கிரஸ் நெல்லை மாவட்ட தலைவர் ஜெயக்குமார் கொலை நடந்து ஒரு வருடமாகிறது. ஒரு குற்றவாளி கூட கைது இல்லை. ஜெயக்குமார் கடைசியாக எழுதியதாக கடிதம் வெளியானது என்னாச்சு? என கூறியுள்ளார்.
News April 29, 2025
திருநெல்வேலி சங்க தேர்தல் ரத்து

திருநெல்வேலி வழக்கறிஞர்கள் சங்க தேர்தல் நாளை நடைபெற இருந்தது. இதில் பல்வேறு குளறுபடிகள் கண்டுபிடிக்கப்பட்டு அந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதியரசர்கள் ஸ்ரீமதி, நிஷா பானு ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. தொடர்ந்து நாளை நடைபெற இருந்த சங்க தேர்தல் ரத்து செய்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் பின்னர் தேர்தலை நடத்த வேண்டும் என உத்தரவிட்டனர். இதனால் வழக்கறிஞர்கள் ஏமாற்றமடைந்தனர்
News April 29, 2025
BREAKING நெல்லை டவுனில் வருமான வரித்துறை சோதனை

திருநெல்வேலி டவுன் பகுதியில் செயல்பட்டு வரும் காஜா பீடி நிறுவனத்தில் வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மத்திய போலீஸ் பாதுகாப்புடன் வருமானவரித்துறையினர் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஒரு பிரிவினர் இங்கே சோதனை மேற்கொண்டு வரும் நிலையில் மற்றொரு பிரிவினரும் வேறு இடங்களில் சோதனை நடத்தி வருவதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.