News March 30, 2025

புதிய நகராட்சியாக உருவானது சங்ககிரி

image

தமிழக அரசு (மார்ச் 30) திருவண்ணாமலை மாவட்டம் போளூர்,செங்கம், கோத்தகிரி, நீலகிரி, அவிநாசி, பெருந்துறை மற்றும் சேலம் மாவட்டம் சங்ககிரி ஆகிய 7 பேரூராட்சியை நகராட்சியாக அறிவித்து அரசாணை வெளியிட்டுள்ளது. சங்ககிரி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான நகராட்சி கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். (Share பண்ணுங்க.)

Similar News

News April 8, 2025

சேலம் ரயில்வே கோட்டத்தின் அறிவிப்பு

image

ஜோலார்பேட்டை- திருப்பத்தூர் ரயில் நிலையங்களுக்குட்பட்ட ரயில் தண்டவாளங்களில் பராமரிப்பு காரணமாக, ஜோலார்பேட்டை- ஈரோடு ரயில் (56107) ஏப்ரல் 08, 15 ஆகிய நாட்களில் மதியம் 02.45 மணிக்கு புறப்பட வேண்டிய நிலையில் 55 நிமிடங்கள் தாமதமாக பிற்பகல் 03.40 மணிக்கு புறப்படும் என சேலம் ரயில்வே கோட்டம் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. இந்த ரயில் சேலம் ரயில் நிலையத்தில் 3 நிமிடங்கள் நின்று செல்லும்.

News April 7, 2025

சேலத்திற்கான புதிய அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர்

image

“சென்னை, செங்கல்பட்டு, கோவை, மதுரை, திருநெல்வேலி, சேலம் ஆகிய மண்டலங்களிலுள்ள 8 கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள் மூலம் நகைக்கடன் வழங்கப்படும். அங்கு பாதுகாப்பு அறையுடன் கூடிய இரும்பு பெட்டகங்கள் நிறுவப்படும்” என்று சட்டப்பேரவையில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்திற்கு பிறகு அமைச்சர் முத்துசாமி அறிவித்துள்ளார். 

News April 7, 2025

மேட்டூரில் பாலியல் தொழில்: தம்பதி கைது

image

எடப்பாடியை சேர்ந்த பாக்கியம், அவரது கணவர் பழனிச்சாமி ஆகியோர், மேட்டூரில் ‘திருமண தகவல் மையம்’ என்ற பெயரில் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்துவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த பகுதிக்கு சென்ற மேட்டூர் போலீசார், தம்பதியினரை கைது செய்து, ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 2 பெண்களை மீட்டனர். மேலும், ஓமலூர் பெண்கள் காப்பகத்தில் அந்த பெண்களை ஒப்படைத்தனர்.

error: Content is protected !!