News August 16, 2024
புதிய டிஎஸ்பியாக திருநாவுக்கரசு நியமனம்

முதல்வர் ஸ்டாலின் இடைத்தேர்தலில் கொடுத்த வாக்குறுதி படி விக்கிரவாண்டி தாலுகாவில் புதிய துணை உட்கோட்டம் பிரிக்கப்பட்டு, இதில் விழுப்புரம் டி.எஸ்.பி., அலுவலகத்திற்குட்பட்டு செயல்படும் விக்கிரவாண்டி, பெரியதச்சூர், கண்டமங்கலம், வளவனுார், விக்கிரவாண்டி போக்குவரத்து பிரிவு உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கி புதிய டிஎஸ்பி-யாக திருநாவுக்கரசு நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் செஞ்சி டிஎஸ்பியாகவும் செயல்படுவார்.
Similar News
News November 23, 2025
விழுப்புரம்: இன்றைய இறைச்சி விலை நிலவரம்

இன்றைய (நவம்பர் 23) சந்தை நிலவரப்படி, விழுப்புரத்தில் நாட்டு கோழி ஒரு கிலோ 450 ரூபாய்க்கும், பிராய்லர் கோழி 190 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. ஆட்டுக்கறி ஒரு கிலோ 800 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மீன் வகைகளில் சிறிய வஞ்சரம் ஒரு கிலோ 800 ரூபாய்க்கும், சங்கரா ஒரு கிலோ 400 ரூபாய்க்கும், தேங்காய் பாறை 360 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
News November 23, 2025
விழுப்புரம்: LICENSE வைத்திருப்போர் கவனத்திற்கு!

லைசன்ஸ் வைத்திருப்போர், வாகன உரிமையாளர்கள் ஆகியோருக்கு மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் முக்கிய ஆலோசனை வழங்கியுள்ளது. மேலே குறிப்பிடப்பட்டோர், தங்கள் லைசன்ஸ் மற்றும் ஆவணங்களில் மொபைல் நம்பரை அப்டேட் செய்ய வேண்டும். இதை RTO ஆபீஸுக்கு செல்லாமலேயே, இங்கே<
News November 23, 2025
விழுப்புரம்: HOUSE OWNER பிரச்சனையா? இத பண்ணுங்க!

வாடகை வீட்டில் வசிப்பவர்களா நீங்கள்? வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை நீங்கள் எதிர்கொண்டால் கவலைப்படாதீர்கள். உங்களின் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். இதை SHARE பண்ணுங்க.


