News August 16, 2024
புதிய டிஎஸ்பியாக திருநாவுக்கரசு நியமனம்

முதல்வர் ஸ்டாலின் இடைத்தேர்தலில் கொடுத்த வாக்குறுதி படி விக்கிரவாண்டி தாலுகாவில் புதிய துணை உட்கோட்டம் பிரிக்கப்பட்டு, இதில் விழுப்புரம் டி.எஸ்.பி., அலுவலகத்திற்குட்பட்டு செயல்படும் விக்கிரவாண்டி, பெரியதச்சூர், கண்டமங்கலம், வளவனுார், விக்கிரவாண்டி போக்குவரத்து பிரிவு உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கி புதிய டிஎஸ்பி-யாக திருநாவுக்கரசு நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் செஞ்சி டிஎஸ்பியாகவும் செயல்படுவார்.
Similar News
News December 10, 2025
விழுப்புரம்: SIR சந்தேகங்களுக்கு வாட்ஸ் ஆப் எண் வெளியீடு

தமிழ்நாட்டில் சிறப்பு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த கணக்கீட்டு படிவம் வழங்கிய நிலையில் அதை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க நாளையே (டிச.11) கடைசி நாள். இது சம்பந்தமான அனைத்து சந்தேகங்களுக்கும் 1950 என்ற உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்துள்ளது. மேலும் வாட்ஸ் ஆப் மூலமாக தொடர்பு கொள்வதற்கு 9444123456 என்ற எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது. பயனுள்ள தகவலை உடனே ஷேர் பண்ணுங்க.
News December 10, 2025
விழுப்புரம்: மயங்கி விழுந்து விவசாயி பலி

கீழ்புத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி கன்னியம்மாள் (45), செவ்வாய்க்கிழமை அதே பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் வேலை செய்துகொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென மயங்கி நிலத்தில் விழுந்தார். அவரை மீட்டு புதுச்சேரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர் தெரிவித்தார். இதுகுறித்து மரக்காணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News December 10, 2025
விழுப்புரம்: பஸ்சில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

குன்னியூரைச் சேர்ந்த ஸ்ரீபிரியா (26), சென்னை திருமண நிகழ்வுக்காக அரசுப் பேருந்தில் விழுப்புரம் நோக்கி பயணித்தார். விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் அவர் இறங்கி பார்த்தபோது, தன் பையில் வைத்திருந்த 3.5பவுன் நகை காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பேருந்துக் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி மர்ம நபர் நகையை திருடியது தெரியவந்தது. இதுகுறித்து ஸ்ரீபிரியா புகாரின் பெயரில் போலீசார் விசாரிக்கின்றனர்.


