News April 22, 2025
புதிதாக 3 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னையில், நேற்று (ஏப்ரல் 21) 32 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில், 2 ஆண்கள் மற்றும் 1 பெண் என மூவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருந்தது தெரியவந்துள்ளது. அவர்கள், ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மூவரும் நலமுடன் உள்ளதாகவும், பொது சுகாதாரத்துறை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எச்சரிக்கையுடன் இருங்கள். ஷேர் செய்யுங்கள்.
Similar News
News November 20, 2025
சென்னை இளைஞர்களே நாளை மிஸ் பண்ணாதீங்க!

சென்னை, கிண்டி பெண்கள் ஐடிஐ வளாகத்தில் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நாளை(நவ.21) காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற உள்ளது. இந்த முகாமல் பல்வேறு தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன. இதுகுறித்து விவரங்கள் அறிய 9499966026 எனும் எண்ணை அழைக்கலாம். <
News November 20, 2025
சென்னை: ரயில்வேயில் 3,000 காலி இடங்கள்- APPLY HERE!

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) மூலம் 3,058 NTPC காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12-ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். 18 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இந்த பணிக்கு மாதம் 19,000 முதல் 21,000 வரை சம்பளம் வழங்கப்பட இருக்கிறது. மேலும் விருப்பமுள்ளவர்கள் நவம்பர்-27க்குள் <
News November 20, 2025
சென்னையில் கேள்விக்குறியாகும் பெண்களின் பாதுகாப்பு!

சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயிலுக்கு தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர். அதேபோல் மருத்துவ மாணவி ஒருவர் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்துள்ளார். அப்போது அதே வரிசையில் நின்ற அரசு கார் ஓட்டுநரான விஜயகுமார் பாலியல் தொல்லைக் கொடுத்துள்ளார். இதில் அதிர்ச்சியடைந்த அவர் போலீசில் புகார் அளித்ததை தொடர்ந்து மயிலாப்பூர் போலீசார் அவரை கைது செய்தனர்.


