News May 7, 2025

புடவையில் தீப்பிடித்து பெண் உயிரிழப்பு

image

காம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த அஞ்சலை. நேற்று முன்தினம் இயற்கை உபாதை கழிப்பதற்காக தனது வீட்டின் அருகே சென்ற போது அங்கு யாரோ குப்பை கொளுத்திய நெருப்பு புகைத்து கொண்டிருப்பதை கவனிக்காமல் அருகில் சென்றுள்ளார். அப்போது திடீரென புடவையில் தீப்பிடித்து உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டு மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சிக்கு அழைத்து வரப்பட்ட நிலையில் நேற்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Similar News

News December 12, 2025

கள்ளக்குறிச்சி: வீடு கட்ட ரூ.2.10 லட்சம் உதவி!

image

முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் பற்றி தெரியுமா? வீடு இல்லமால் தவிக்கும் குடும்பங்களுக்கு இலவசமாக 300 சதுரடியில் ரூ.2.10 லட்சம் மதிப்பில் மழை நீர் சேகரிப்பு வசதி, 5 சூரிய சக்தியால் இயங்கும் CF விளக்கு வசதியுடன் வீடு கட்டி தரப்படும். இந்த திட்டத்தில் நீங்களும் பயனடைய வேண்டுமா? உங்கள் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் வீடு கட்டும் கனவு நிறைவேறும். SHARE பண்ணுங்க!

News December 12, 2025

கள்ளக்குறிச்சி: பெண்ணுக்கு கொலை மிரட்டல்!

image

அரசம்பட்டை பகுதியைச் சேர்ந்த அய்யம்மாள், குபேந்திரன் இருவரும் பக்கத்து வீட்டுக்காரர்கள். இவர்களுக்கிடையே இடப் பிரச்சனை ஏற்பட்டு அடிக்கடி வாக்குவாதம் இருந்து வரும் நிலையில், அய்யம்மாள் வீட்டில் இருந்தபோது குபேந்திரன் தன்னுடைய இடத்தில் 2 அடி சேர்த்து கழிவறை கட்டியதாக கூறி, அய்யம்பாளை திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்த புகாரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

News December 12, 2025

கள்ளக்குறிச்சி கலெக்டர் பங்கேற்கிறார்…!

image

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலகம் ஏற்பாட்டில் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா இன்று(டிச.12) காலை 10 மணி அளவில் கச்சிராயபாளையம் சாலையில் உள்ள தனியார் மஹாலில் நடைபெற உள்ளது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் கலந்துகொள்கிறார்.

error: Content is protected !!