News May 7, 2025

புடவையில் தீப்பிடித்து பெண் உயிரிழப்பு

image

காம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த அஞ்சலை. நேற்று முன்தினம் இயற்கை உபாதை கழிப்பதற்காக தனது வீட்டின் அருகே சென்ற போது அங்கு யாரோ குப்பை கொளுத்திய நெருப்பு புகைத்து கொண்டிருப்பதை கவனிக்காமல் அருகில் சென்றுள்ளார். அப்போது திடீரென புடவையில் தீப்பிடித்து உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டு மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சிக்கு அழைத்து வரப்பட்ட நிலையில் நேற்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Similar News

News November 25, 2025

கள்ளக்குறிச்சி: மழையால் இடிந்து விழுந்த வீடுகள்!

image

கள்ளக்குறிச்சியில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழையால், நேற்று (நவ.25) மட்டும் 3 வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. தியாகதுருகம் அருகேயுள்ள வடதொரசலூர் கிராமத்தைச் சேர்ந்த மணவாளன் என்பவரது வீடு இடிந்து விழுந்தது. அதேபோல், உதயமாமட்டு கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவரது வீடும் இடிந்து விழுந்தது. இதுகுறித்து வருவாய்த் துறையினர் கணக்கீடு செய்து நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

News November 25, 2025

தனியார் உணவகம் முன்பாக நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனம் திருட்டு

image

காரனூரை சேர்ந்த ராஜனின் அக்கா மகன் பழனிவேல் தனியார் உணவகத்தில் மேற்பார்வையாளராக வேலை செய்து வருவதாகவும், நேற்று காலை தனியார் உணவகம் முன்பு வாகனத்தை நிறுத்திவிட்டு இரவு வேலை முடிந்து வந்து பார்த்தபோது இருசக்கர வாகனத்தை காணவில்லை. இது தொடர்பாக ராஜன் நேற்று தனியார் உணவகத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News November 25, 2025

கள்ளக்குறிச்சி:இரவு நேர ரோந்து பணி விவரங்கள்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (நவ.24) இரவு முதல் நாளை (நவ.25) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!