News May 7, 2025

புடவையில் தீப்பிடித்து பெண் உயிரிழப்பு

image

காம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த அஞ்சலை. நேற்று முன்தினம் இயற்கை உபாதை கழிப்பதற்காக தனது வீட்டின் அருகே சென்ற போது அங்கு யாரோ குப்பை கொளுத்திய நெருப்பு புகைத்து கொண்டிருப்பதை கவனிக்காமல் அருகில் சென்றுள்ளார். அப்போது திடீரென புடவையில் தீப்பிடித்து உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டு மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சிக்கு அழைத்து வரப்பட்ட நிலையில் நேற்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Similar News

News November 19, 2025

கள்ளக்குறிச்சியில் நாளை மின் தடை அறிவிப்பு!

image

பெத்தாசமுத்திரம் துணை மின்நிலையம நயினார்பாளையம் வி.அம்பலம், வி.கிருஷ்ணாபுரம், பாத்திமாபாளையம், கீழ்க்குப்பம், அனுமனந்தல், பெத்தாசமுத்திரம், தோட்டப்பாடி, பூண்டி, தத்தாதிரிபுரம், குரால், காளசமுத்திரம், தாகம்தீர்த்தாபுரம், நீலமங்கலம், நிறைமதி ஆகிய பகுதிகளில் நாளை (நவ.20) காலை 9 மணி – மதியம் 2:00 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் . இதனால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவிப்பு.

News November 19, 2025

கள்ளக்குறிச்சி: இன்று இதை செய்தால் பணம் கொட்டும்!

image

கார்த்திகை பௌர்ணமிக்கு எவ்வளவு சக்தி உள்ளதோ, அதே அளவு சக்தி கார்த்திகை மாத அமாவாசைக்கும் உள்ளது. இம்மாதத்தில் வரும் அமாவாசையை ‘மிருகசீரிஷ அமாவாசை’ என்பர். இம்மாத அமாவாசை இன்று காலை முதல் நாளை நண்பகல் 12.31 வரை உள்ளது. இந்த நாளில், மாலை நேரத்தில் உங்கள் வீடுகளில் அகல் விளக்கேற்றுவதன் மூலம் லட்சுமி தேவியின் அருளை பெற முடியும். இதனால் உங்கள் வீட்டில் செல்வம் கொழிக்கும். ஷேர் பண்ணுங்க!

News November 19, 2025

கள்ளக்குறிச்சி: டிகிரி போதும் ரூ.50,000 சம்பளத்தில் வேலை ரெடி!

image

கள்ளக்குறிச்சி மக்களே இந்திய ஸ்டீல் ஆணையத்தில் 124 ‘Management Trainee’ காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு விண்ணப்பிக்க B.E/B.Tech படித்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.50,000 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க டிச.5ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க<> இங்கே கிளிக் <<>>பண்ணுங்க. இந்த நல்ல வாய்பபை அனைவருக்கும் SHARE பண்ணுங்

error: Content is protected !!