News May 7, 2025
புடவையில் தீப்பிடித்து பெண் உயிரிழப்பு

காம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த அஞ்சலை. நேற்று முன்தினம் இயற்கை உபாதை கழிப்பதற்காக தனது வீட்டின் அருகே சென்ற போது அங்கு யாரோ குப்பை கொளுத்திய நெருப்பு புகைத்து கொண்டிருப்பதை கவனிக்காமல் அருகில் சென்றுள்ளார். அப்போது திடீரென புடவையில் தீப்பிடித்து உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டு மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சிக்கு அழைத்து வரப்பட்ட நிலையில் நேற்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Similar News
News December 19, 2025
காலநிலை மாற்றம் தழுவல், தணிப்பு உத்திகள் குறித்த திறன் மேம்பாட்டு பயிற்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம் திட்டத்தின்கீழ் தமிழ்நாடு காலநிலை மாற்றம் தழுவல் மற்றும் தணிப்பு உத்திகள் குறித்த திறன் மேம்பாட்டு பயிற்சியினை
ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் இன்று (டிச.19) தொடங்கி
வைத்து, கேடயங்களை வழங்கினார்.இதில் அரசு அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
News December 19, 2025
கள்ளக்குறிச்சி:மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு

சிறுவங்கூர் பகுதியில் அமைந்துள்ள கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையினை ஆட்சியர் பிரசாந்த் முன்னிலையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மைச் செயலாளர் செந்தில்குமார் இன்று (டிச.19) நேரில் ஆய்வு மேற்கொண்டார். மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் செயல்பாடுகள் மற்றும் மருத்துவ சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
News December 19, 2025
கள்ளக்குறிச்சி: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000/- APPLY…!

டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள முதல் இரண்டு குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு மூன்று தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. இங்கு <


