News May 7, 2025

புடவையில் தீப்பிடித்து பெண் உயிரிழப்பு

image

காம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த அஞ்சலை. நேற்று முன்தினம் இயற்கை உபாதை கழிப்பதற்காக தனது வீட்டின் அருகே சென்ற போது அங்கு யாரோ குப்பை கொளுத்திய நெருப்பு புகைத்து கொண்டிருப்பதை கவனிக்காமல் அருகில் சென்றுள்ளார். அப்போது திடீரென புடவையில் தீப்பிடித்து உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டு மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சிக்கு அழைத்து வரப்பட்ட நிலையில் நேற்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Similar News

News November 21, 2025

கள்ளக்குறிச்சி: SIR பணிச்சுமையால் BLO தற்கொலை!

image

கள்ளக்குறிச்சி: திருக்கோவிலூர், சிவனார்தாங்கள் கிராமத்தில் வாக்குச்சாவடி நிலை அலுவலராக பணி புரிந்து வந்த ஜாகிதா பேகம் என்பவர் SIR பணிச்சுமை காரணமாக மன உளைச்சலுக்கு உள்ளாகி நேற்று (நவ.20) தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். பின், பிரேத பரிசோதனைக்காக அவரது உடல் திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், இது குறித்து காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News November 21, 2025

கள்ளக்குறிச்சி: கிரேன் அறுந்து விழுந்து ஒருவர் பலி!

image

கள்ளக்குறிச்சி: சொக்கனந்தலை சேர்ந்த கன்னியப்பன் தனியார் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் எறையூர்பாளையம் அருகே கிரேன் மூலமாக வழிகாட்டி பலகையை பொருத்திய போது கிரேன் ரோப் அருந்து கீழே விழுந்ததில் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அவரது தந்தை அளித்த புகாரின் பேரில நேற்று (நவ.20) எலவனாசூர்கோட்டை போலீசார் வழக்குபதிவு செய்தனர்.

News November 21, 2025

கள்ளக்குறிச்சி: இரவு ரோந்து பணியின் காவல்துறை விவரம்!

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (நவ.20) இரவு முதல் நாளை (நவ.21) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!