News May 7, 2025
புடவையில் தீப்பிடித்து பெண் உயிரிழப்பு

காம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த அஞ்சலை. நேற்று முன்தினம் இயற்கை உபாதை கழிப்பதற்காக தனது வீட்டின் அருகே சென்ற போது அங்கு யாரோ குப்பை கொளுத்திய நெருப்பு புகைத்து கொண்டிருப்பதை கவனிக்காமல் அருகில் சென்றுள்ளார். அப்போது திடீரென புடவையில் தீப்பிடித்து உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டு மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சிக்கு அழைத்து வரப்பட்ட நிலையில் நேற்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Similar News
News November 25, 2025
கள்ளக்குறிச்சி: பாராட்டுக் கடிதங்களை வழங்கிய ஆட்சியர்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகத்தில், சிறப்புத் தீவிரத் திருத்தம் (SIR) பணிகள் நிர்ணயம் செய்த காலத்திற்குள் முடிக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து, சிறப்பாக பணிபுரிந்த வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள்/ வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் மேற்பார்வை அலுவலர்களுக்கு மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவருமான எம்.எஸ்.பிரசாந்த் இன்று (25.11.2025) பாராட்டுக் கடிதங்களை வழங்கினார்.
News November 25, 2025
கள்ளக்குறிச்சி: இனி ஆதார் கார்டு வேண்டாம்.. இது போதும்!

கள்ளக்குறிச்சி மக்களே.. இனிமேல் உங்களின் ஆதார் கார்டை எப்போதும் கையிலேயே எடுத்துச்செல்ல வேண்டிய அவசியம் இல்லை. <
News November 25, 2025
கள்ளக்குறிச்சி: பட்டப்பகலில் இருசக்கர வாகனம் திருட்டு!

கள்ளக்குறிச்சி: காரனூரை சேர்ந்த ராஜனின் அக்கா மகன் பழனிவேல் தனியார் உணவகத்தில் மேற்பார்வையாளராக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில், ராஜன் நேற்று (நவ.24) தனியார் உணவகம் முன்பு வாகனத்தை நிறுத்திவிட்டு இரவு வேலை முடிந்து வந்து பார்த்தபோது இருசக்கர வாகனத்தை காணவில்லை. இது தொடர்பாக ராஜன் நேற்று அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


