News May 7, 2025

புடவையில் தீப்பிடித்து பெண் உயிரிழப்பு

image

காம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த அஞ்சலை. நேற்று முன்தினம் இயற்கை உபாதை கழிப்பதற்காக தனது வீட்டின் அருகே சென்ற போது அங்கு யாரோ குப்பை கொளுத்திய நெருப்பு புகைத்து கொண்டிருப்பதை கவனிக்காமல் அருகில் சென்றுள்ளார். அப்போது திடீரென புடவையில் தீப்பிடித்து உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டு மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சிக்கு அழைத்து வரப்பட்ட நிலையில் நேற்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Similar News

News September 16, 2025

கள்ளக்குறிச்சியில் 6 உதவி ஆய்வாளர்கள் பணியிடை மாற்றம்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 6 உதவி ஆய்வாளர்கள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த கனகவள்ளி கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்க பிரிவிற்கும், உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த ராஜேஷ் கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்கபிரிவிற்கும் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

News September 16, 2025

கள்ளக்குறிச்சி: டிகிரி இருந்தால் போதும்! ரயில்வேயில் வேலை

image

தமிழக ரயில்வேயில் Seclection controller பணிக்கான வேலை வாய்ப்பு வெளியாகியுள்ளது. இதற்கு எதாவது ஒரு டிகிரி முடித்த 20-30 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த வேலைக்கு மொத்தம் 368 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாத சம்பளம் ரூ.35,400 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கு<> கிளிக்<<>> செய்து அக்.14க்குள் விண்ணப்பிக்கவும். மேலும் விவரங்களுக்கு 9592001188 என்ற எண்ணை அழைக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News September 16, 2025

கள்ளக்குறிச்சியில் கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை

image

கள்ளக்குறிச்சியில் தொழிலாளர் நலத்துறை சார்பில் மீட்கப்பட்ட குழந்தை மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளர்களுக்கு அரசு நிவாரணத் தொகை வழங்கப்பட்டது. 18 வயதுக்குட்பட்டவர்களை வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்தார். இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபம் நிறுவன உரிமையாளர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டு, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

error: Content is protected !!