News April 14, 2024

புகார் தெரிவிக்க தொலைபேசி எண்

image

மயிலாடுதுறையில் மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபட்ட ஆச்சாள்புரம் பகுதியை சேர்ந்த மகாலெட்சுமி என்பவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் மதுவிலக்கு குற்றம் தொடர்பாக புகார் தெரிவிக்க இலவச உதவி எண் 10581 அல்லது 9626169492 என்ற எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News November 13, 2025

மயிலாடுதுறை: மாவட்ட ஆட்சியர் முக்கிய தகவல்!

image

மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் தற்போது சாகுபடி செய்துள்ள சம்பா தாளடி பயிர்களை, இயற்கை இடர்பாடுகளில் இருந்து பாதுகாக்க பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டத்தில் நவம்பர் 15க்குள் காப்பீடு செய்து கொள்ளலாம். ஒரு ஏக்கருக்கான பயிர் காப்பீட்டு பிரிமியம் தொகையாக ரூ.564ஐ அருகில் உள்ள பொது சேவை மையங்களில் செலுத்தி பயிர் காப்பீடு செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

News November 13, 2025

மயிலாடுதுறை: மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் (4.11.2025) முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் கணக்கெடுப்பு பணிகள் வருகிறது. இதில் வாக்காளர்களுக்கு வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்பு படிவங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இப்பணிகளின் முன்னேற்றம் குறித்து, இன்று (13.11.2025) மயிலாடுதுறை நகராட்சி காவேரி நகர் பகுதியில் மாவட்ட ஆட்சியர் அவர்களால் நேரடி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

News November 13, 2025

மயிலாடுதுறை: புதிய வருவாய் அலுவலர் பதவியேற்பு

image

மயிலாடுதுறை மாவட்ட வருவாய் அலுவலராக ஆர். பூங்கொடி நேற்று பதவியேற்றுக் கொண்டார். இவர் சென்னை மாவட்டத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்ட அலுவலராக இருந்து வந்துள்ளார். முன்னதாக மயிலாடுதுறை மாவட்ட வருவாய் அலுவலராக பணியாற்றி வந்த உமா மகேஸ்வரி நாகை மாவட்ட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!