News April 14, 2024
புகார் தெரிவிக்க தொலைபேசி எண்

மயிலாடுதுறையில் மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபட்ட ஆச்சாள்புரம் பகுதியை சேர்ந்த மகாலெட்சுமி என்பவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் மதுவிலக்கு குற்றம் தொடர்பாக புகார் தெரிவிக்க இலவச உதவி எண் 10581 அல்லது 9626169492 என்ற எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 20, 2025
மயிலாடுதுறையில் பாதுகாப்பு ஒத்திகை

அந்நிய சந்தேக நபர்கள் மற்றும் தீவிரவாதிகளின் கடல் சார் ஊடுருவலை தடுக்கும் விதமாக கடலோர மாவட்டங்களில் நடைபெறும் சாகர் கவாச் ஒத்திகை நிகழ்ச்சி இன்று மற்றும் நாளை நடைபெறுகிறது. அவ்வகையில் மயிலாடுதுறை மாவட்ட எஸ்பி ஸ்டாலின் மேற்பார்வையில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில், சீர்காழி டிஎஸ்பி அண்ணாதுரை 9 காவல் ஆய்வாளர்கள் 30 உதவி ஆய்வாளர்கள் என 263 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
News November 20, 2025
மயிலாடுதுறையில் பாதுகாப்பு ஒத்திகை

அந்நிய சந்தேக நபர்கள் மற்றும் தீவிரவாதிகளின் கடல்சார் ஊடுருவலை தடுக்கும் விதமாக நடத்தப்படும் “சாகர் கவாச்” ஒத்திகை நிகழ்வு, மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று நடைபெற்றது. இதனை மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது காவலர்கள் உடன் இருந்தனர்.
News November 20, 2025
மயிலாடுதுறை: 10th போதும் அரசு வேலை!

அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் காலியாக உள்ள 1383 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: 10th, 12th, டிப்ளமோ, துறை சார்ந்த டிகிரி
3. கடைசி தேதி : 02.12.2025
4. சம்பளம்: ரூ.18,000 – ரூ.1,51,100
5. வயது வரம்பு: 18 – 40 (SC/ST – 45, OBC – 43)
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்க..


