News April 14, 2024
புகார் தெரிவிக்க தொலைபேசி எண்

மயிலாடுதுறையில் மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபட்ட ஆச்சாள்புரம் பகுதியை சேர்ந்த மகாலெட்சுமி என்பவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் மதுவிலக்கு குற்றம் தொடர்பாக புகார் தெரிவிக்க இலவச உதவி எண் 10581 அல்லது 9626169492 என்ற எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 14, 2025
மயிலாடுதுறை: அரசு பஸ்சில் செல்வோர் கவனத்திற்கு…

மயிலாடுதுறை மக்களே, அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகள், தங்களது புகார்களை தெரிவிக்க தமிழ்நாடு போக்குவரத்து கழகம் ‘1800 599 1500’ என்ற கட்டணமில்லா புகார் எண்ணை அறிவித்துள்ளது. இதன் மூலம் பயணிகளை ஏற்ற மறுப்பது, பேருந்து நிறுத்தத்தில் பஸ் நிற்காமல் செல்வது, தாமதமாக வருவது, சில்லறை பிரச்சனை, ஓட்டுநர் அல்லது நடத்துநரின் தவறான நடத்தை போன்ற புகார்களை பயணிகள் தெரிவிக்கலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க!
News December 14, 2025
மயிலாடுதுறை மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை

மயிலாடுதுறை மாவட்ட பொதுமக்கள் குறைந்த விலையில் பொருட்கள் விற்பனை செய்வதாக சமூக வலைதளத்தில் வரும் போலியான விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம், இதன் மூலம் உங்களது பணத்தை இழக்க நேரிடலாம் என மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரித்துள்ளது. மேலும், பொதுமக்களை பாதுகாக்கும் பொருட்டு பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளில் மாவட்ட காவல்துறை ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
News December 14, 2025
மயிலாடுதுறை: மனைவியை தீ வைத்து கொளுத்திய கணவர்

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட கண்டியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆதித்யன். இவரது மனைவி பிரேமா. இருவருக்கும் சமீபகாலமாக குடும்ப பிரச்சனை இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் நடந்த தகராறின் போது கோபமடைந்த ஆதித்யன் தனது மனைவி மீது டீசலை ஊற்றி கொளுத்தி உள்ளார். அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், ஆதித்யனை குத்தாலம் போலீசார் கைது செய்தனர்.


