News April 14, 2024
புகார் தெரிவிக்க தொலைபேசி எண்

மயிலாடுதுறையில் மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபட்ட ஆச்சாள்புரம் பகுதியை சேர்ந்த மகாலெட்சுமி என்பவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் மதுவிலக்கு குற்றம் தொடர்பாக புகார் தெரிவிக்க இலவச உதவி எண் 10581 அல்லது 9626169492 என்ற எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 4, 2025
மயிலாடுதுறை: போக்குவரத்து நிறுத்தம்

கொள்ளிடம் அருகே வடரங்கத்தில் இருந்து உச்சிமேடு பாலுரான்படுகை உள்ளிட்ட 10 கிராமங்கள் வழியாக மாதிரிவேளூர் செல்லும் சாலையில் அரசடி என்ற இடத்தில் சாலை சுமார் 200 மீட்டர் தொலைவிற்கு கனமழையால் இரண்டாக பிளந்துள்ளது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. பல கிராமங்களுக்கு பிரதான சாலையாக விளங்கும் இந்த சாலை மூடப்பட்டதால் கிராம மக்கள் பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்கள் அவதி அடைந்து வருகின்றனர்
News December 4, 2025
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் வருகிற வெள்ளிக்கிழமை (டிச 5) காலை 10 மணி முதல் 5 மணி வரை நீண்ட காலமாக உரிமை கோரப்படாத வங்கி வைப்பு தொகைகள் காப்பீட்டு தொகைகள் மற்றும் பங்கு தொகைகளை உரியவர்களிடம் ஒப்படைக்கும் சிறப்பு முகாம் அந்தந்த வங்கி கிளைகளில் நடைபெற உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு உரிமையான சொத்துக்களை மீட்டெடுக்க அடையாள ஆவணங்கள் மற்றும் தேவையான சான்றுகளுடன் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்
News December 4, 2025
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் வருகிற வெள்ளிக்கிழமை (டிச 5) காலை 10 மணி முதல் 5 மணி வரை நீண்ட காலமாக உரிமை கோரப்படாத வங்கி வைப்பு தொகைகள் காப்பீட்டு தொகைகள் மற்றும் பங்கு தொகைகளை உரியவர்களிடம் ஒப்படைக்கும் சிறப்பு முகாம் அந்தந்த வங்கி கிளைகளில் நடைபெற உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு உரிமையான சொத்துக்களை மீட்டெடுக்க அடையாள ஆவணங்கள் மற்றும் தேவையான சான்றுகளுடன் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்


