News October 23, 2024

புகார் அளிக்க தொலைபேசி எண் அறிவிப்பு

image

தமிழகத்தில் சாதி வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் இனத்தை சேர்ந்த நபர்கள் மற்றும் தீருதவி தொடர்பான முறையீடுகள் செய்ய18002021989 அல்லது 14566 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்களை பயன்படுத்தி புகார்கள் பதிவு செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் இன்று அறிவித்துள்ளார்.

Similar News

News October 30, 2025

கள்ளக்குறிச்சியில் அனைத்து கட்சி ஆலோசனைக் கூட்டம்

image

கள்ளக்குறிச்சியில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனை முன்னிட்டு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் பிரதிநிதிகளுடன் மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நாளை (அக்.30) அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.

News October 29, 2025

கள்ளக்குறிச்சி: ரூ.20,000 மானியத்தில் இ-ஸ்கூட்டர் வேண்டுமா?

image

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2) விண்ணபிக்க <>இங்கு க்ளிக்<<>> செய்து இணையதளத்திற்கு செல்ல வேண்டும். 3)அதில் Subsidy for eScooter/என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். 4) பின்னர் ஆதார், ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும். 5)விண்ணப்பிக்க தெரியாதவர்கள் இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம். (SHARE பண்ணுங்க)

News October 29, 2025

கள்ளக்குறிச்சி: நீங்களும் இ-சேவை மையம் தொடங்கலாம்

image

இ-சேவை மையம் தொடங்க விருப்பமா? அதற்கு முதலில், www.tnesevai.tn.gov.in , என்ற தமிழக அரசின் இ-சேவை இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். புகைப்படம், கல்வி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், ஆதார் அட்டை, பான் கார்டு, வங்கிக் கணக்கு புத்தகம், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவற்றை சமர்பித்து விண்ணப்பிக்கவும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!