News April 15, 2024
பி.ஆர்.டி.சி., பஸ் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம்

புதுச்சேரி தேர்தல் அலுவலகம் நுாறு சதவீதம் ஓட்டுப் பதிவை வலியுறுத்தி, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகம் சார்பாக, புதுச்சேரியில் இயங்கும் பி.ஆர்.டி.சி. பஸ்களில் நுாறு சதவீதம் ஓட்டுப் பதிவு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பெரிய அளவிலான பேனர் வைத்து புதுச்சேரி வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
Similar News
News October 22, 2025
புதுவை: விபத்தில் தூக்கி வீசப்பட்ட 2 இளைஞர்கள்

புதுவை, பொறையூர் உசுடு ஏரி பகுதியில் சைடு தடுப்பு கட்டையில் பைக் மோதியதில் 2 இளைஞர்கள் பொறையூர் ரோடு கீழே இறங்கும் பள்ளத்தாக்கில் தூக்கி வீசப்பட்டனர். இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் ஆம்புலன்ஸ் மூலம் பலத்த காயங்களுடன் இளைஞர்களை மீட்டு, அவசர சிகிச்சைக்காக கதிர்காமம் மருத்துவமமையில் அனுமதித்தனர். இந்நிலையில். அவர்கள் துத்திப்பட்டு கிராமத்தைச் சார்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
News October 22, 2025
காரைக்காலில் மாவட்ட ஆட்சியர் பல்வேறு பகுதிகளில் ஆய்வு

காரைக்கால் மாவட்டத்தில் நேற்று முதல் இடை விடாமல் கனமழையானது பெய்ததால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி பாதிப்படைந்தது. இதனை அடுத்து பாதிப்படைத்த பகுதிகளை காரைக்கால் மாவட்ட ஆட்சியர் ரவி பிரகாஷ், முதுநிலை காவல் கண்காணிப்பாளர் லட்சுமி சௌஜன்யா மற்றும் அரசு அதிகாரிகள் ஆகியோர்கள் இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். இதில் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
News October 21, 2025
BREAKING: புதுவையில் நாளை விடுமுறை அறிவிப்பு

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அடுத்த ஐந்து நாட்களுக்கு கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக புதுச்சேரி மாநிலத்தில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கனமழையின் காரணமாக நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளிக்கு விடுமுறை அறிவிப்பதாக அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.