News March 4, 2025
பிளஸ் 2 மொழிப்பாட தேர்வு; கடலூரில் 350 பேர் ஆப்சென்ட்

கடலுார் மாவட்டத்தில் பிளஸ் 2 முதல் நாள் மொழிப்பாட தேர்வில் 350 பேர் ஆப்சென்ட் ஆகினர். முதல் நாளான நேற்று தமிழ் மொழிப் பாடம் தேர்வு நடந்தது. நேற்றைய தேர்வில் தொடர் விடுப்பில் இருந்த 73 மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை. தனித்தேர்வு எழுதும் 27 மாணவர்கள், பிரெஞ்ச் மொழி விருப்ப பாடமாக எடுத்த ஒரு மாணவர் உட்பட 350 பேர் ஆப்சென்ட் ஆகினர்.
Similar News
News December 3, 2025
கடலூர்: இளம்பெண் மயங்கி விழுந்து உயிரிழப்பு

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த வீரப்பெருமாநல்லூரை சேர்ந்தவர் வனிதா(30). இவர் நேற்று (டிச 2) அதிகாலை தனது வீட்டில் திடீரென மயங்கி விழுந்தார். உடனே அவரை அவரது கணவர் ராஜா மற்றும் உறவினர்கள் மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது வரும் வழியிலேயே வனிதா இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து புதுப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
News December 3, 2025
கடலூர்: 5 டன் ரேஷன் அரிசி கடத்தியர் கைது

குடிமைப் பொருள் போலீசார் ராமநத்தம் அருகே சுடுகாட்டு பகுதியில் நேற்று இரவு சோதனை மேற்கொண்டனர். அப்போது இரண்டு சரக்கு வாகனத்தில் ரேஷன் அரிசி கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது எலமங்கலத்தைச் சேர்ந்த தேனரசு (21) என்பவரை கைது செய்து, இரண்டு சரக்கு வாகனம் மற்றும் ஐந்தாயிரம் கிலோ அரிசியை பறிமுதல் செய்தனர். ம்ர்ர்லும் தப்பி ஓடிய ராஜேஷ், பிரபாகரன், மணிகண்டன் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.
News December 3, 2025
BREAKING: கடலூரில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!

கடலூரில் ‘டிட்வா’ புயல் காரணமாக சில நாட்களாக கனமழை பெய்தது. இதனாக் சாலைகளில் ஆங்காங்கே மழைநீர் தேங்கியுள்ளது. இந்த நிலையில், மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று(டிச.3) கடலூரில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார். மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.


